ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்புவும், சர்ச்சையும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களைப் போலவே இருக்கிறார்கள். இப்போதுதான் 'வாலு' சர்ச்சை ஒரு வழியாக ஓய்ந்து படமும் வெளிவந்து ரசிகர்களை சோதித்துப் பார்த்தது. இப்போது அடுத்த ஒரு சர்ச்சையை சிம்புவும், அவருடைய அப்பா டி.ஆரும் ஆரம்பித்து வைத்துள்ளார்கள். 'இது நம்ம ஆளு' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடியவில்லை. இரண்டு பாடல்கள் எடுக்க வேண்டியுள்ளது, அதற்கு நயன்தாராவின் கால்ஷீட்டை வாங்கித் தர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ஆர். புகார் கொடுத்துள்ளார்.
ஆனால், நயன்தாராவிற்கு இதுவரை நடித்ததற்கே சம்பளத்தை சரியாக கொடுக்கவில்லையாம். அதனால் அவர் எப்படி நடிக்க வருவார் எனச் சொல்கிறார்கள். அதை மறைத்து விட்டு, நயன்தாரா ஏதோ வேண்டுமென்றே வராதது போல ஒரு பிரச்சனையை டி.ஆர் உருவாக்குவதாக கோலிவுட்டில் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும், படத்தை எடுத்து முடிக்க தயாரிப்பாளரான டி.ஆர். பல நேரம் கை விரித்த நேரத்தில் இயக்குனர் பாண்டிராஜே அவருடைய சொந்தப் பணத்தைப் போட்டு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் என்கிறார்கள். அவருக்கும் கோடிக்குப் பக்கத்தில் பணம் தர வேண்டுமாம்.
ஆனால், டி.ஆர் புகார் கொடுத்ததன், பிரச்சனை அதுவல்ல என்கிறார்கள். படத்தின் பிரமோஷனுக்காக ஒரு பாடலை எடுக்க டி.ஆரும், சிம்புவும் திட்டமிட்டுள்ளார்களாம். அந்தப் பாடலில் சிம்பு, டிஆர், படத்திற்கு இசையமைத்துள்ள டி.ஆரின் இளைய மகன் குறளரசன் ஆகியோர் நயன்தாராவுடன் இணைந்து ஒரு பாடலைப் படம் பிடிக்க திட்டம் போட்டுள்ளார்களாம். அது தெரிந்துதான் நயன்தாரா படத்திற்கு கால்ஷீட் தரவில்லை என்கிறார்கள். படத்திற்குண்டான காட்சிகள் அனைத்தையும் அவர் முடித்துக் கொடுத்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். இவர்களில் யார் சொல்வது உண்மை என்பது விரைவில் தெரிந்துவிடும். ஆனாலும், சில நாட்களுக்குள் மீண்டும் ஒரு பலமான சர்ச்சையை டி.ஆர் எழுப்பப் போவது உறுதி.