ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு இந்த மாத இறுதிக்குள் தேர்தல் நடக்கிறது. இதில் விஷால் தலைமையில் ஒரு அணியினரும், சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு பொன்வண்ணனும், துணை தலைவர்களாக கார்த்திக் மற்றும் கருணாசும் போட்டியிடுகிறார்கள்.
சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும் பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. சரத்குமார் அணியில் சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் போட்டியிடுவதாக ராதாரவி நேற்று கோவையில் அறிவித்தார். இவர்கள் இருவரும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று தெரிகிறது. விஷால் தலைமையிலான அணியில் இளம் நடிகர்கள் அதிகம் இருப்பதால் சரத்குமார் அணியும் இளம் நடிகர்களை இழுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது.