ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது பேய் படங்களை மொத்த குத்தகை எடுத்து வருகிறது தேனாண்டாள் பிலிம்ஸ். அருந்ததி, காஞ்சனா, அரண்மனை, பிசாசு, டிமான்டி காலனி என வரிசையாக பேய் படங்களாக வெளியிட்டு ஹிட் கொடுத்து வரும் தேனாண்டாள் பிலிம்ஸ், ஸ்ரீகாந்த் நடித்துள்ள சவுகார் பேட்டை படத்தையும் வெளியிடுகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப்போர் என்ற படத்தையும் அவர்கள் வெளியிடப்போகிறார்களாம். 2025ல் இந்தியா-சீனாவுக்கிடையே போர் நடந்தால், அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை மையப்படுத்தி இப்படம் தயாராகியிருக்கிறது. சுகன் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் சுனில்குமார், அகிலா கிஷோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பெரும்பகுதி இந்தியா-சீனா பார்டரில்தான் நடத்தப்பட்டுள்ளது. அங்கே போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமின்றி, காதல் காட்சிகளும் படமாகியிருக்கிறதாம். இப்படியொரு போருக்கு நடுவே, இந்தியாவைச்சேர்ந்த ஒரு இளைஞனும், சீனாவைச்சேர்ந்த ஒரு பெண்ணும் காதலிப்பது ஒரு பக்கம் உயிரோட்டமாக படமாக்கப்பட்டுள்ளதாம். இந்த மூன்றாம் உலகப்போர் பார்த்த தேனாண்டாள் பிலிம்ஸ் தாங்கள் வெளியிடுவதாக கூறியிருக்கிறார்களாம்.