ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய பாலசமுத்திரம் பகுதி விவசாயிகள் நடிகர் மாதவன் மீது பரபரப்பு புகார்களை கூறினர். அவர்கள் அங்கு பேசியதாவது: கொடைக்கானல் மலையிலிருந்த பழனி பகுதி கண்மாய்களுக்கு தேக்கன் தோட்டம் பகுதி வழியாக செல்லும் டிடிஎல் பாசன வாய்க்கால் மூலமாகத்தான் தண்ணீர் வருகிறது. இந்த கால்வாய் நீரைக்கொண்டு தேக்கன் தோட்டம் பகுதியில் 50 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் நடிகர் மாதவன் 7 ஏக்கர் நிலம் வாங்கினார். அந்த இடத்தின் அருகில் உள்ள நாங்கள் பயன்படுத்தும் களம், புறம்போக்கு பாதை நிலத்தையும் மாதவன் தரப்பினர் ஆக்கிரமித்து கொண்டனர். பாசன கால்வாயையும் மறித்து மின்வேலி அமைத்துள்ளனர். எங்கள் நிலத்தை அவர்களுக்கு விற்கச் சொல்லி மாதவன் ஆட்கள் மறைமுகமாக நெருக்கடி கொடுக்கிறார்கள். எனவே மாதவன் மீதும், அவருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். இது தொடர்பாக விசாரணை நடத்த வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.