ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அஞ்சான், கத்தி படங்களுக்குப்பிறகு தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. தற்போது அவர் கைவசம் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல மெகா ஹீரோக்களின் படங்களாக உள்ளன. இருப்பினும், தெலுங்கில் சுத்தமாக வாஸ் அவுட்டாகி விடக்கூடாது என்று நினைக்கும் சமந்தா, சில தெலுங்கு படங்களில் நடிப்பதற்காகவும் முயற்சி செய்தார். ஆனால் அவர் கமிட்டாகயிருந்த சில படங்கள் கடைசி நேரத்தில் வேறு நடிகைக்கு சென்று விட்டன. குறிப்பாக, மகேஷ்பாபுவுடன் அவர் நடிக்கயிருந்த பிரமோற்சவம் படத்தில் இப்போது அவருக்குப்பதிலாக ராகுல் பரீத்சிங் கமிட்டாகியிருக்கிறார். அதேபோல், ராம்சரண் நடிக்கும் ஆர்சி 9 என்ற படத்தில் நடிக்க சமந்தா பேசிவந்த நிலையில் இப்போது அந்த படத்திலும் அதே ராகுல் பரீத் சிங்கே ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
ஆக, சமந்தாவுக்கான வாய்ப்புகளை புதிதாக வளர்ந்து கொண்டிருக்கும் ராகுல்ப்ரீத் சிங் வேகவேகமாக கைப்பற்றிக்கொண்டுள்ளார். இதனால் தற்போது தெலுங்கில் சுத்தமாக படங்களே இல்லாத நிலையில் இருக்கிறார் சமந்தா. மேலும், அடுத்தபடியாக தமிழில் படங்களை குறைத்துக்கொண்டு தெலுங்கிலும் சமஅளவு கவனம் செலுத்து திட்டமிட்டுள்ள சமந்தா, இப்போது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஐதராபாத்தில் முகாமிட்டு, அங்குள்ள தனது அபிமான ஹீரோக்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்துவதோடு, புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறார்.