சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கிய சுதீப்பை நான் ஈ படத்தின் வாயிலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகிற்கு இயக்குநர் ராஜமௌலி அறிமுகப்படுத்தினார். நான் ஈ படத்தின் வாயிலாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுதீப்பை நான் ஈ படம் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பாராட்டினர். இப்படத்தை தொடர்ந்து தமிழிலும் தெலுங்கிலும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகராக மாறிவிட்ட சுதீப் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் நடித்திருந்தார்.தற்போது நடிகர் விஜய்யுடன் புலி படத்தில் நடித்துள்ளார். கன்னட படங்களிலும் பிசியாக நடித்து வரும் சுதீப் ராஜமௌலி போன்று தானும் ஒரு சரித்திர திரைப்படத்தை ஐந்து மொழிகளில் இயக்க விருப்பம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார். ராஜமௌலியின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவரான சுதீப் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.