ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கேமராமேன்களின் ஆழ்மனதுக்குள் புதைந்து கிடக்கும் டைரக்சன் ஆசை நாளாக நாளாக வளர்ந்து ஒரு நாள் வெடித்து டக்கென அவர்களை இயக்குனர்களாக மாற்றிவரும் அதிசயத்தை நாம் தொடர்ந்து பார்த்துதானே வருகிறோம்.. சந்தோஷ் சிவன், கே.வி.ஆனந்த், ராஜீவ் மேனனிலிருந்து தற்போதைய விஜய் மில்டன், வேல்ராஜ் வரை எல்லோரும் இதே ரூட்டில் டைரக்சன் என்ட்ரி போட்டவர்கள தான். அந்தவகையில் மலையாள சினிமாவின் முக்கியமான, முன்னணியில் உள்ள ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் இப்போது இயக்குனர் தொப்பியை எடுத்து அணிய இருக்கிறார்..
தனது முதல் படத்திலேயே பிருத்விராஜை இயக்கவிருக்கும் சுஜித் வாசுதேவன் ஒன்றும் லேசுப்பட்ட ஆளில்லை.. மலையாள த்ரிஷ்யம், தமிழ் பாபநாசம் என ஜீத்து ஜோசப்பின் கண்களாக இருந்து வெற்றிகளை கொடுத்த ரெக்கார்டுகளுக்கு சொந்தக்காரார். அதுமட்டுமல்ல பிருத்விராஜின் பல படங்களுக்கு கேமராமேனாக ஒளிப்பதிவு செய்தவர். இப்போதும் அவரது அனார்கலி, அமர் அக்பர் ஆண்டனி படங்களுக்கு சுஜித் தான் கேமராமேன்.. ஆக பிருத்விராஜை ஒகே பண்ணுவதில் சுஜித்துக்கு சிரமம் ஏதும் இருக்கவில்லை. இந்த இரண்டு படங்களை முடித்ததும் வரும் அக்டோபரில் படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்கள்.