ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமெளலி. இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படமாக பாகுபலி தற்போது திகழ்கிறது. ஒரு மாதமாகியும் வசூல் குறையாத சக்கரவர்த்தியாக பாகுபலி இருக்கிறது. பாகுபலி படத்திற்கு பின்னர் கோலிவுட்டிலிருந்து, பாலிவுட் நடிகர்கள் வரை பலரும் ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க ஆவலாய் இருந்து வருகின்றனர். ஆனால் ராஜமெளலியோ நடிகர் அஜித்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்.
சமீபத்தில், பாகுபலி படம் தொடர்பாக சென்னை வந்திருந்த ராஜமெளலி, அஜித்தை பற்றி புகழ்ந்து பேசினார். அதுமட்டுமின்றி சென்னை வந்தபோது அஜித்தையும் சந்தித்தாக கூறப்படுகிறது.
மேலும் ராஜமெளலியின் தந்தையும், பாகுபலி, பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ராஜமெளலி என்னிடம் ஒரு யதார்த்தமான, சமூக கருத்துள்ள படம் ஒன்றை இயக்க வேண்டும் என்றும், அந்தப்படத்தை அஜித் மற்றும் அல்லு அர்ஜூனை கொண்டு இயக்க வேண்டும் என்று தமது விருப்பத்தை கூறியதாக அவர் கூறியுள்ளார். இவை எல்லாவற்றையும் வைத்து பார்க்கும் போது விரைவில், அஜித் வைத்து ராஜமெளலி படம் இயக்குவார் என தெரிகிறது. அப்படி உருவாகும் இந்தப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் என தெரிகிறது.
தற்போது பாகுபலி-2 பட வேலைகளை துவங்கியிருக்கும் ராஜமெளலி, அடுத்தப்படியாக மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படங்களை எல்லாம் முடித்த பின்னர் அஜித் படத்தை இயக்குவார் என தெரிகிறது.