சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
'பாகுபலி' படம் வெளிவந்த 24 நாட்களுக்குள்ளாக 500 கோடி ரூபாயைக் கடந்து தென்னிந்தியத் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. நேற்று கிடைத்த தகவல்களின்படி கடந்த ஞாயிறு முடிய இந்தப் படம் 500 கோடி ரூபாயைக் கடந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கில் நேரடியாகவும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டும் உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் முதல் நாளிலிருந்தே நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று இன்று வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாயும், தமிழில் சுமார் 65 கோடி ரூபாயும், ஹிந்தியில் 105 கோடி ரூபாயும், கேரளாவில் 10 கோடிக்கு மேலும், கர்நாடகாவில் 25 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியில் ஒரு டப்பிங் படம் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூல் சாதனை புரிந்துள்ளதை ஹிந்தித் திரையுலகினரே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இந்தப் படத்தை ஹிந்தியில் வாங்கி வெளியிட்ட கரண் ஜோஹரின் மார்க்கெட்டிங்கிற்கு கிடைத்த வெற்றி அது என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
24 நாட்கள் வசூலாக 505 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், அதில் 'நெட்' தொகையாக சுமார் 375 கோடி ரூபாய் வந்துள்ளதாகவும் சொல்கிறார்கள். ஹிந்தியில் வெளியான 'பிகே, தூம் 3' ஆகிய படங்கள்தான் இதுவரை 500 கோடி ரூபாய் வசூலித்த படங்களாக இருந்தன. அந்த வரிசையில் முதன் முறையாக ஒரு தென்னிந்தியப் படம் இடம் பெற்றுள்ளது.