ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விஷால் சமீப நாட்களாக கடும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறார். நடிகர் சங்க விவகாரத்தில் எதிர் தரப்பினரிடம் அடிக்கடி வாங்கிக் கட்டிக் கொள்கிறார் விஷால். இந்த தாக்குதல் அவர் எதிர்பார்த்ததுதான் என்றாலும், மற்ற பிரச்சனைகளில் கருத்து சொல்லியும் கல்லடிபடுகிறார். கேரளாவில் நாயை கொல்வதற்கு எதிராக விஷால் சொன்ன கருத்துக்கு மலையாளிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் அப்துல் கலாம் இறந்ததும் சினிமா நடிகர்கள் யாரும் அவருக்கு அஞ்சுலி செலுத்தப்போகாதது குறித்து கண்டனங்கள் எழுந்தன. இதுகுறித்து கருத்து தெரிவித்த விஷால் அது என் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். விஷால் இப்படி சொன்னதைக்கேட்டதும் மக்கள் பொங்கி எழுந்துவிட்டனர்.
“உங்கள் தியேட்டரில் போய் பார்ப்பதும்... திருட்டு விசிடியில் பார்ப்பதும் எங்களின் தனிப்பட்ட விருப்பம். அப்படி இருக்க திருட்டு விசிடிக்கு எதிராக சவுண்ட் கொடுப்பது ஏன்?” என்று தொடங்கி சகட்டுமேனிக்கு விஷாலை கழுவி ஊற்றி வருகின்றனர்.