ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் பிரமாண்டமாக திரைக்கு வந்து வசூலிலும் பிரமாண்ட சாதனை நிகழ்த்தியிருக்கும் பாகுபலி படத்தின் இயக்குநர் ராஜமௌலி தற்போது அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றார். இந்நிலையில் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்குநர் ராஜமௌலி இயக்க மறுத்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ரூ.20 கோடி சம்பளமாக தருவதாகக் கூறிய போதும் இயக்குநர் ராஜமௌலி சிரஞ்சீவி பட வாய்ப்பை மறுத்து விட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் தான் நடிகரும் சிரஞ்சீவியின் 150வது படத்தின் தயாரிப்பாளருமான ராம் சரண் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தை சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பூரி ஜெகன்நாத் சிரஞ்சீவிக்காக ஆட்டோ ஜானி என்ற பட தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளது. இதன் காரணமாகவே ராஜமௌலி சிரஞ்சீவி படத்தை இயக்க மறுத்ததாகக் கூறப்படுகின்றது.