ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் ராம் தற்போது தரமணி என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து அவர் மிஷ்கினின் தம்பியும், உதவியாளருமான ஆதித்யா இயக்கும் சவரக்கத்தி படத்தில் நடிக்கிறார். இதில் ராம்தான் ஹீரோ, மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார்.
ராம் சலூன்கடை நடத்தும் நாவிதராக நடிக்கிறார். பிச்சை என்பது அவரது கேரக்டர் பெயர். அவரது வாடிக்கையாளராக மிஷ்கின் நடிக்கிறார். இவருக்கும் நடக்கும் உரையாடல் மூலமாக கதை சொல்லப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நடக்கும் கதை. தனது சலூன்கடை அனுபங்களின் அடிப்படையில் மிஷ்கின் இந்த கதையை எழுதியுள்ளார். அவரே தயாரிக்கவும் செய்கிறார். மனிதநேயம்தான் படத்தில் சொல்லப்படும் மெசேஜ். பூர்ணா 3 குழந்தைகளின் தாயாக நடிக்கிறார். ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.