ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் 'அலை, யாவரும் நலம்' ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் தற்போது இயக்கி வரும் படம் '24'. இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாகவும், சமந்தா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே மும்பையில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது படத்தில் இன்னொரு கதாநாயகியாக நித்யா மேனன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேடத்திற்கு சமந்தாவும் மற்றொரு வேடத்திற்கு நித்யா மேனனும் ஜோடி என்கிறார்கள். மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படத்திற்குப் பிறகு தமிழில் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ள நித்யா மேனனுக்கு சூர்யாவுடன் நடிப்பது அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
சமந்தாவும், நித்யா மேனனும் இதற்கு முன் 'ஜபர்தஸ்த்' என்ற தெலுங்குப் படத்தில் நாயகிகளாக ஒரே படத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழில் தற்போது ஒரே படத்தில் இரண்டு நாயகிகள் நடிப்பது அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.