ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கலாபக்காதலன் படத்தை இயக்கிய இகோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி உள்ள படம் வந்தா மல. தமிழ், பிரசாத், ஹிட்லர், உதயராஜ் என்ற புதுமுகங்களுடன் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். சாம் டி.ராஜ் இசை அமைத்துள்ளார். வட சென்னையில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் பெரிய குற்றத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிற கதை. நாட்டையே நாசமாக்கும் ஒரு கும்பலிடமிருந்து நாட்டை காப்பாற்றுகிற கதை. "திருடு பொய்சொல்லு நாட்டை காப்பாத்து" என்பதுதான் படத்தோட மெசேஜ்.
வருகிற ஆகஸ்ட் 7ந் தேதி படம் வெளிவருகிறது. இந்தப் படத்தின் கடைசி இணைப்பாக பராசக்தி படத்தில் சிவாஜி பாடும் "தேசம், ஞானம், கல்வி, ஈசன், பூசையெல்லாம் காசு முன் செல்லாதடி..." என்ற பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. சரிகம நிறுவனத்திடமிருந்து முறைப்படி உரிமம் பெற்று அதனை ரீமிக்ஸ் செய்து சேர்த்துள்ளர். இந்த பாடலை கருணாநிதி எழுதியிருந்தார்.
"பராசக்தி காலத்திலும் பணம்தான் பிரதானமாக இருந்திருக்கிது, இந்தக் காலத்திலும் பணம்தான் எல்லாவற்றுக்கும் முன் நிற்கிறது. இதற்காக பாரசக்தி பாடலை அதன் மெருகு குன்றாமல் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தியிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் இகோர்.