ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோலிவுட்டில் தற்போது நடிகர் சங்க தேர்தல் விவகாரம்தான் அக்னி நட்சத்திர வெயிலாய் அனல் பறந்து கொண்டிருக்கிறது. சரத்குமார், ராதாரவி அணி ஒரு பக்கமும், விஷால், நாசர் அணி இன்னொரு பக்கமும் அரசியல்வாதிகளைப் போன்று தீவிர வாக்குசேகரிப்பில் வரிந்து கட்டி வருகிறார்கள்.
அதோடு, யாராவது நடிகர் நடிகைகள் உதவி என்று குரல் கொடுத்தால் நான் நீயென்று போட்டிபோட்டுக் கொண்டு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அதோடு எங்கள் அணி ஜெயித்தால் உங்களுக்கு இந்தந்த சலுகைகளை யெல்லாம் செய்வோம் என்றும் அரசியல் பாணியில் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறார்கள்.
இந்தநிலையில், பல இளவட்ட நடிகர் நடிகைகள் எந்தெந்த பக்கம் இருக்கிறார்கள் என்பது ஓரளவு தெரிந்து விட்டது என்றாலும், ஜெயம்ரவி போன்ற சிலர் வாயே திறக்காமல் கமுக்கமாக இருக்கிறார்கள். அதனால் இதுபற்றி ஜெயம்ரவியிடம் சிலர் கேட்டதற்கு, நான் எந்த அணிக்கு ஆதரவு கொடுக்கிறேன் என்பது சஸ்பென்ஸ். ஆனால், கண்டிப்பாக நியாயத்தின் பக்கம்தான் நிற்பேன். அது நடிகர் சங்க தேர்தல் முடிவுக்கு பிறகு உங்களுக்கே தெரியும் என்கிறார்கள்.
அதைக்கேட்டு, ஒருவேளை ஜெயிக்கிற பக்கம் சாய்ந்து விடலாம் என்று இந்த புத்திசாலித்தமான பதிலை சொல்லி வருகிறாரோ ஜெயம்ரவி என்று பேசிக்கொள்கிறார்கள்.