ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மக்களின் ஜனாதிபதி, ஏவுகணையின் நாயகன், மாணவர்களின் எழுச்சி நாயகன் என பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரரான டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் மறைவு இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரமணா படத்தில், ''ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து, அவனுக்காக அந்த குடும்பமே அழுதால் அவன் ஒரு நல்ல குடும்ப தலைவன்... ஆனால் ஒருவனுக்காக நாடே அழுகிறது என்றால்...'' என்று ஒரு வசனக்காட்சி வரும்... அந்தவசனக்காட்சி ஒரே ஒரு சொந்தக்காரர் என்றால் அப்துல் கலாம் மட்டும் தான். அவரின் மறைவுக்கு நாடே அழுகிறது.
கலாமின் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வணிக நிறுவனங்கள் உட்பட பலர் விடுமுறை அளித்துள்ளனர். இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் நாளை இரண்டு நேரம் காட்சிகளை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத்தி்ன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... ''அப்துல் கலாம் அவர்களின் மறைவு பேரிழப்பு. நாளை(ஜூலை 30) அவரது உடல் அடக்கம் செய்யப்படுவதையொட்டி திரையரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகளை ரத்து செய்துள்ளோம்'' என்று கூறப்பட்டுள்ளது.