மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது. பிரம்மா இயக்கி உள்ள இந்தப் படத்தை சிருஷ்டி சிலுவப்பன் தயாரித்திருந்தார். அதனை ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சதீஷ்குமார் வாங்கி வெளியிடுகிறார். படம் ஆகஸ்டில் வெளிவருகிறது. ராதிகா, பிரசித்தா, மாஸ்டர் அஜய் நடித்துள்ளனர்.
ஒரு ஆசிரியைக்கும் பள்ளி மாணவனுக்கு இடையிலான கதை. அதீத திறமை வாய்ந்த தன் மாணவனை ஆசிரியை புத்திசாலித்தனமாக கையாள்கிறார். ஒரு முறை அவர் லீவில் சென்று விட அடுத்து வரும் ஆசிரியர் அந்த மாணவனை தவறாக கையாள ஒரு விபரீதம் நடந்து விடுகிறது. அந்த மாணவின் அதீத திறமையே அந்த பிரச்னைக்கு காரணம் என்று எல்லோருக்கும் புரிய வைத்து ஆசிரியை மாணவனை காப்பாற்றுகிற கதை.
தற்போது இதனை தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறார். தமிழில் இயக்கிய பிரம்மாவே இந்தியிலும் இயக்குகிறார். ஆசிரியை கேரக்டரில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார்.