ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேப்டன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, அழகி, தெய்வம் தந்த வீடு, சரவணன் மீனாட்சி ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். நான் நிஜத்தில் ரொம்ப கோபக்காரி. அதனால் நெகட்டிவ் ரோல்கள்தான் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்கிறார் பிரியங்கா.
தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் சொன்ன தகவல்கள் இங்கே இடம்பெற்றுள்ளது... எனது சொந்த ஊர் மதுரை. கல்லூரியில் படித்து வந்தபோதே நான் மதுரையில் உள்ள லோக்கல் சேனல்களில் ஆங்கராக ஒர்க் பண்ணியிருக்கிறேன். அதன்பிறகு சென்னை வந்து இமயம் சேனலில் ஆங்கரிங் பண்ணினேன். காலேஜ் பைனல் இயர் படிச்சபோது கேப்டன் டிவி, ஜீ தமிழ் ரெண்டு சேனலுக்கும் டிரை பண்ணினேன். ரெண்டு சேனல்லையுமே சான்ஸ் கெடைச்சது. ஆனால் ஜீ தமிழ்ல ப்ரிலேன்சராக கூப்பிட்டாங்க. கேப்டன் டிவியில் ஸ்டாபா கூப்பிட்டாங்க. அதனால் கேப்டன் டிவியில் சேர்ந்துட்டேன்.
முக்கியமாக கேப்டன் டிவியில நான் படிப்பை தொடரவும் உதவி பண்ணினாங்க. திரைவிமர்சனம், இன்டர்வியூ, சமையல் புரோக்கிராம்னு பல நிகழ்ச்சிகளுக்கு ஆங்கரிங் பண்ணினேன். இதற்கிடையே படிப்பையும் விடாம கன்டினியூ பண்ணினேன்.
இதுதவிர, சரவணன் மீனாட்சி, அழகி, தெய்வம் தந்த வீடு என சில சீரியல்களிலும் நடித்திருக்கிறேன். பெரிய பெயர் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது என்னை அடையாளம் தெரிந்து கொள்கிறார்கள். அதனால் அடுத்தபடியாக இன்னும் பெரிதாக பேசப்படும் வகையிலான கேரக்டர்களில் நடிக்கும் முயற்சியில் இருக்கிறேன்.
இப்படி சொன்ன பிரியங்காவிடம், எந்த மாதிரியான வேடங்களை எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்டால்,
பாசிட்டிவ் ரோல்கள் என்றால் ஒரேமாதிரியான நடிப்பைத்தான் வெளிப்படுத்த வேண்டியதிருக்கும். ஆனால் நெகட்டிவ் ரோல்களில் அப்படியல்ல. சிலரிடம் நல்லவளாக நடிக்கும்போது, பலரிடம் கெட்டவளாக நடிக்க வேண்டியதிருக்கும். இப்படி மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும். அதோடு கதையில் திருப்பங்களை ஏற்படுத்தும் வேடமாக இருக்கும். சீரியல் பார்க்கும் பெண்களின் கவனம் இந்த நெகட்டிவ் ரோல் மீதே இருக்கும். அதனால் அந்த மாதிரி வேடம் ஈஸியாக ரீச் ஆகி விடும். மற்றபடி சீரியல் வில்லிகளை பெண்கள் திட்டுகிறார்கள் என்பதெல்லாம் சாதாரணமான விசயம். அப்படி திட்டுவதுதான் அந்த கேரக்டர்களுக்கு கிடைக்கிற வெற்றியாக நான் கருதுகிறேன்.
இப்படி நெகட்டிவ் வேடங்களில் நடிக்க நான் ஆர்வமாக இருப்பதற்கு பின்னால் இன்னொரு காரணமும் உள்ளது. அதாவது, நான் இயல்பாகவே ரொம்ப கோபக்காரி. அதனால் எனக்கு வில்லி வேடம் நல்லா சூட்டாகும். மேலும், சின்னச்சின்ன விசயங்களுக்குகூட கோபம் வந்துடும். அதனால் நெகட்டிவ் ரோல் என்கிறபோது இந்த கோபம் ரொம்ப யூஸ்புல்லாகவும், தத்ரூபமாகவும் இருக்கும்.
நான் நடித்த அழகி சீரியல்ல நெகட்டிவ் ரோல் பண்ணினேன். ஆனால் சரவணன் மீனாட்சியில இன்னோசன்ட் வேடம். இன்னும் இதைவிட வெயிட்டான நெகட்டிவ் ரோல்களை எதிர்பார்க்கிறேன் என்று சொல்லும் பிரியங்கா, சுதாசந்திரன் எனக்கு பிடித்த ஆர்ட்டிஸ்ட். ரொம்ப இயல்பா நடிப்பாங்க. அவங்க நடிப்பை அதிகமா ரசிப்பேன். எனக்கு ரோல் மாடல்னா அவங்கதான். தெய்வம் தந்த வீடு சீரியல்ல நானும் நடிச்சேன். ஆனாலும் அவங்களோட எனக்கு சீன் இல்லாதது எனக்கு வருத்தமா இருந்தது என்கிறார்.