ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட் நடிகர் ராணா டகுபதி, பாகுபலி படத்தின் மூலம், டோலிவுட்டை மட்டுமல்லாது, கோலிவுட் மற்றும் பாலிவுட் என ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்கும் பரிட்சயமான நடிகராக மாறிவிட்டார். பாகுபலி படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், வெளியாகி உள்ளது. பாகுபலி படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டார்....
பாகுபலி படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளீர்கள். ஏன் வில்லன் கேரக்டரை தேர்ந்தெடுத்தீர்கள்?
பாகுபலி படத்தில், நான் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளது உண்மைதான். இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்பதே என் கனவு. எந்த கேரக்டரிலாவது நடித்துவிட வேண்டும் என்ற முடிவில் தான் இருந்ததால், வில்லன் கேரக்டரோ.....ஹீரோ கேரக்டரோ என்பதை பார்க்கவில்லை. ராஜமெளலி படத்தில், வில்லனுக்கு தான் அதிக மதிப்பு இருக்கும். அந்த கேரக்டரே, எனக்கு கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ராமாயணத்தில் ராவணனையும், மகாபாரதத்தில் துரியோதனையும் தான் பிடிக்கும். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தபோது தான், ஒவ்வொரு ஹீரோவும், தங்களது கேரியரில், ஒருமுறையாவது வில்லன் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
பாலிவுட்டில் உங்களுக்கு பிடித்த வில்லன் யார்?
எனக்கு வில்லனை பிடிக்கும் என்று எவ்விடமும் சொல்லவில்லை. மகாபாரதத்தில் துரியோதனன், சகுனி, ராமாயணத்தில் ராவணன் உள்ளிட்ட கேரக்டர்கள் பிடிக்கும் அவ்வளவுதான். அவர்கள் எல்லாம் உண்மையான வில்லன்கள் அல்ல. பாலிவுட் திரையுலகில், வில்லன் கேரக்டரில் சிறப்பாக நடிப்பவர் அம்ரீஷ் புரி தான். படங்களில் அவரது வில்லத்தனம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது படங்களை, நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வருகிறேன். அம்ரீஷ் புரி, திறமையான நடிகர்.
பாகுபலி படம் குறித்து....
ராஜ்யத்தை கைப்பற்ற சம பலம் பொருந்திய இரண்டு சகோதரர்களுக்கு இடையே நடைபெறும் யுத்தம் தான், பாகுபலி படம். நானும், பிரபாசும் சகோதரர்கள் கேரக்டரில் நடித்துள்ளோம். இந்தியாவிலேயே முதல்முறையாக, இரண்டு பாகங்களாக, ஒரேநேரத்தில் இப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தின் சூட்டிங்கில் மட்டும் இந்நாள் வரை, 3 ஆண்டுகளுக்குமேல் நடித்துள்ளேன். என்னுடைய வாழ்நாளில், 60 சதவீதத்தை, இப்படத்திற்காக மட்டுமே நான் செலவழித்துள்ளேன். கதையே, இப்படத்தின் இதயம் போன்றது. இதில் எந்த கேரக்டரும் பெரியதல்ல....
இப்படத்திற்காக, எத்தகைய பயி்ற்சியை பெற்றீர்கள்?
நான் மட்டுமல்ல, இப்படத்திற்காக, ஒட்டுமொத்த குழுவினரும் சண்டை, தற்காப்புக்கலை, நடனம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பயிற்சிகளை பெற்றுள்ளோம். இது பீரியட் படம் என்பதால், அந்தக்கால சண்டைக்காட்சிகளுக்காக, 5 முதல் 6 மாதங்கள் வரை சண்டைப்பயிற்சிகளை பெற்றோம். இதுமட்டுமல்லாது, தற்காப்புக்கலை, மற்றும் பாடி பில்டிங் பயிற்சிகளையும் பெற்றோம். பயிற்சியாளர்கள் வெளிநாட்டினராக இருந்தபோதிலும், அதில் இந்தியன் டச் இருக்குமாறு, இயக்குநர் ராஜமெளலி பார்த்துக்கொண்டார். இந்த படத்திற்காக, நான் எனது உடல் எடையை 100 கிலோவுக்கு மேல் ஏற்றிக்கொண்டேன். கேரக்டருக்கு தேவை என்பதால், இயக்குநரின் உத்தரவின்பேரில், நியூட்ரிஷனிஸ்ட்களின் அறிவுரையின்படி, உடல் எடையை அதிகரித்தேன்.
இப்படத்தில் நடிப்பது குறித்து, உங்கள் குடும்பத்தினர் என்ன கூறினார்கள்?
ஒரு படத்திற்கு 3 ஆண்டுகளா? இந்த 3 ஆண்டுகளில் நீ 4 முதல் 5 படங்கள் நடிக்கலாமே என்று முதலில் என் குடும்பத்தினர் கூறிவந்தனர். பின் பாகுபலி படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில், எனது அப்பா, தங்கை உள்ளிட்ட அனைவரும் என்னிடம் வந்து,. மிகப்பெரிய படத்தில் நடிக்க உள்ளாய். இதுவே, தங்களுக்கு பெருமையாக உள்ளது என்று அவர்கள் கூறினர்.
ராஜமெளலியுடன் முதல்முறையாக இணைந்துள்ளீர்கள். எவ்வாறு உணர்கிறீர்கள்?
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ராஜமெளலி படத்தில் முதன்முறையாக நடித்துள்ளேன். ராஜமெளலி எளிமையானவர் மற்றும் திறமையானவர். இந்த படத்தின் ப்ரீ புரொடெக்ஷன் பணிகள் மட்டும் 1 மாத காலம் நடைபெற்றது. படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங், ஆறு ஆண்டுகளாக நடைபெற்றது. படத்தின் கேரக்டர் மட்டுமல்லாது, ஒவ்வொரு காட்சியும் புதியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ராஜமெளலி. படம் வெளியானவுடன் கிடைக்க இருக்கும் எல்லா பாராட்டும் மற்றும் புகழும், ராஜமெளலியை மட்டுமே சேரும். சூட்டிங்கின் போது, பலர் எளிதில் கோபப்பட்டு விடுவார்கள். ஆனால், ராஜமெளலி சார் எத்தருணத்திலும் அமைதியை கடைபிடிப்பவர். இந்த சிறப்புத்தன்மையை வேறுயாரிடத்திலும் நான் கண்டதில்லை. சூட்டிங்கின் போது ஒவ்வொரு நாளும், 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை ஒருங்கிணைப்பதிலும்., அவர்களிடம் அமைதியான முறையில் வேலை வாங்கும் அவரது சுபாவமே, எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.
இயக்குநராகும் எண்ணம் உள்ளதா?
நிச்சயமாக....நான் நிச்சயம் படங்களை இயக்குவேன், ஏனெனில் இயக்குநர் ஆக எனக்கு மிகவும் ஆசை. இயக்குநர் ராஜமெளலி போன்று நற்தகுதிகளை வளர்த்துக்கொண்ட பின், படங்களை இயக்குவேன். ராஜமெளலி விரும்பினால், அவரிடமே, உதவியாளராக சேர விருப்பமாக உள்ளேன். விரைவில் படங்களை இயக்குவேன். இயக்குநர் ஆகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று ராணா டகுபதி கூறினார்.