சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இந்திய அளவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாக இதுவரை ஷங்கரின் எந்திரன் படம்தான் முதலிடம் வகித்து வந்தது. ஆனால் இப்போது அந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்து பாகுபலி என்ற படத்தை இயக்கியிருக்கிறார் ராஜமவுலி. இந்த படத்தின் படப்பிடிப்பே இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்றிருக்கிறது.
சரித்திர பின்னணி கொண்ட கதை என்பதால், பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் சென்று படமாக்கியிருக்கும் ராஜமவுலி, அந்த காலகட்டத்தை கோடிக்கணக்கில் செட் போட்டு கண்முன் நிறுத்தியவர், சண்டை காட்சிகளுக்காக ஏராளமான குதிரை, யானைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்.
மேலும், தமிழ், தெலுங்கை முன்வைத்து படம் தயாரிக்கப்பட்டபோதும், தற்போது இந்தியாவில் அதிகமான மக்கள் பேசி வரும் பல மொழிகளிலும் இப்படம் டப் செய்து வெளியிடப்படுகிறதாம். வருகிற 10ந்தேதி திரைக்கு வரும் பாகுபலி படம் ஆந்திராவில் அதிகப்படியான தியேட்டர்களை கைப்பற்றியுள்ளது. அதனால், அதே தேதியில் வெளியாகயிருந்த மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படம் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது.