ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிங்கி சர்க்கார் என்கிற பெங்காலி நடிகையைத் தெரியுமா? கருப்பசாமி குத்தகைதாரர் என்ற படத்தில் நடித்த மீனாட்சியை தெரியுமா? இருவருமே ஒருவர்தான். பெங்காலி சினிமாவில் இருந்து தெலுங்கு சினிமாவுக்கு வந்து அங்கிருந்து தமிழுக்கு வந்தவர். தமிழ் இயக்குனர் மூர்த்திதான் கருப்பசாமி குத்தகைதாரர் கதை களம் மதுரை என்பதால் மீனாட்சி என்று நாமகரணம் சூட்டினார். அதன் பிறகு பெருமாள், ராஜாதி ராஜா, டின்.07 ஏஎல் 4777, போன்ற சில படங்களில் நடித்தார். சில படங்களில் குத்தாட்டம் போட்டார். கரு.பழனியப்பனின் மந்திர புன்னகை படம் கைகொடுக்கும் என்று நினைத்தார். எல்லாமே கைவிட சொந்த ஊருக்கே சென்று விட்டார்.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்தார். வந்தவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை துப்பாக்கி, வெள்ளக்கார துரை படங்களில் சிறிய ரோலும், ஒரு பாட்டுக்கு ஆடத்தான் வாய்ப்பு கிடைத்தது. பாக்யராஜ் நடித்த துணை முதல்வர் படத்தில் ஜெயராமுக்கு ஜோடியா நடிக்க இருந்தார். அந்த வாய்ப்பை காதல் சந்தியா பறித்துக் கொண்டார். வில்லங்கம் என்ற படத்தில் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. அது பூஜையுடன் நின்று போனது.
இப்படி பல வழிகளில் புறக்கணிக்கப்பட்ட மீனாட்சி இனி கவர்ச்சியும், கேரக்டர் ரோல்களுமே கைகொடுக்கும் என்று முடிவெடுத்து விட்டார். தனது ஹீரோயின் ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டார். தற்போது ஜீவா, நயன்தாரா நடிக்கும் திருநாள் படத்தில் கவர்ச்சியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். கும்பகோணத்தில் சாராயம் காய்ச்சுவது, கந்து வட்டிக்கு பணம் கொடுப்பது போன்றவற்றை செய்யும் வில்லேஜ் வில்லி கேரக்டரில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். இதுவாவது மீனாட்சிக்கு கைகொடுக்குமா என்று பார்க்கலாம்.