ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ரீ-என்ட்ரியில் அப்பாடக்கர், மாப்ள சிங்கம் படங்களைத் தொடர்ந்து இறைவி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி. ஆனால் நடித்து முடித்துள்ள படங்கள் திரைக்கு வந்த பிறகுதான் அவரது மார்க்கெட் எகிறுமா இல்லை படுத்துக்கொள்ளுமா என்பது தெரியவரும். மேலும், ஏற்கனவே சினிமாவில் பல மேடு பள்ளங்களை பார்த்தவர் அஞ்சலி. அதனால் இந்த முறை அவர் ரொம்ப உஷாராக இருக்கிறார். முக்கியமாக, தமிழில் தொடர்ந்து படங்கள் கிடைத்து வருகிறதே என்பதற்காக அவர் தனது தாய்மொழியான தெலுங்கு சினிமாவை விடவில்லை. ஒன்று கைவிட்டாலும் இன்னொன்று தக்க சமயத்தில் கைகொடுத்து காப்பாற்றும் என்கிற ரீதியில் தெலுங்கு சினிமாவையும் கெட்டியாக பிடித்து வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது தெலுங்கிலும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் அஞ்சலி. அதோடு தமிழில் அவருக்கு சாப்ட்டான வேடங்களாக கிடைக்கும் நிலையில், தெலுங்கில் அதிரடி கதாபாத்திரங்கள் கிடைக்கிறதாம். இதனால் இதுகூட எனக்கு ஒரு புதிய அனுபவமாகவே உள்ளது என்று கூறியபடி இரண்டு மொழிக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் அஞ்சலி.