விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பில்லா, ஆரம்பம் படங்களின் இயக்குநராக விஷ்ணுவர்தனின் தம்பி என்ற விசிட்டிங்கார்டை வைத்துக் கொண்டு நடிகரானவர் கிருஷ்ணா. அலிபாபா, கழுகு, என பல படங்களில் நடித்தும் பிரபலமாகாமலே இருந்த கிருஷ்ணா விஜய்சேதுபதி உடன் இணைந்து வன்மம் என்ற படத்தில் நடித்தார். அந்தப்படத்தில் நடித்த பிறகுதான் நாலு பேருக்கு தெரிகிற அளவுக்கு வளர்ந்தார்.
இந்நிலையில், தன் மனைவியை செய்வதாக அறிவித்திருக்கிறார் கிருஷ்ணா. கடந்த வருடம் தான் ஹேமலதா என்ற பெண்ணை காதலித்து மணந்தார். அதற்குள் விவாகரத்து. என்ன காரணம்?
கிருஷ்ணா ஹேமலாதா விவாகரத்துக்கு நடிகை சுனைனாதான் காரணம் என்று கோலிவுட்டில் பரவலாக செய்தி வெளியாகியுள்ளது. வன்மம் படத்தில் சுனைனா உடன் சேர்ந்து நடித்தார் கிருஷ்ணா. அந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சுனைனா மீது காதல் வயப்பட்டிருக்கிறார் கிருஷ்ணா. அதன் பிறகுதான் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இதுதொடர்பாக நடிகை சுனைனாவிடம் தொடர்பு கொள்ள முற்பட்டபோது அவர், போனை அட்டண்ட் பண்ணவில்லை. அதேசமயம் அவரது அம்மாவிடம் தொடர்பு கொண்டு இதுப்பற்றி கேட்டோம்... அவர் கூறுகையில், வன்மம் படத்தை முடித்தவுடன் நாங்கள் சுத்தமாக சென்னையில் இல்லை, பெங்களூருக்கு வந்துவிட்டோம். கிருஷ்ணாவுக்கும், எங்களுக்கும் அதன்பின்னர் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. கிருஷ்ணா குடும்ப பிரச்னையில், தேவையில்லாமல் என் மகளை தொடர்புபடுத்துவது நியாயம் அல்ல என்று கூறியுள்ளார்.