மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த படம் வாலி. சிம்ரன் நாயகியாக நடித்த அந்த படத்தில்தான் ஜோதிகா தமிழுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற, ''சோனா ஓ சோனா ஐ லவ்யூ லவ்யூடா...'' என்ற பாடல் அப்போது பிரபலம் என்பதால் அந்த பாடலே ஜோதிகாவை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.
அதையடுத்து சூர்யா, விஜய் என அனைத்து மேல்தட்டு ஹீரோக்களுடனும் நடிக்கத் தொடங்கிய ஜோதிகா, ஒரு கட்டத்தில் கமல், ரஜினி என தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். பின்னர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பை விட்டு முற்றிலுமாக விலகியவர், 36 வயதினிலே படம் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.
அந்த படத்தில் நடித்து வந்தபோது, யூனிட்டில் இருந்த அனைத்து நடிகர் நடிகைகளிடமும் மிக இயல்பாக பழகினாராம் ஜோதிகா. முன்னணி நடிகை என்று அவரை கண்டு ஒதுங்கிய நின்றவர்களெல்லாம் அவரது எளிமையைக்கண்டு நெருங்கி வந்து சகஜமாக பழகினார்களாம்.
அதோடு, எப்படி அஜித்குமார், தனக்கான காட்சிகள் முடிந்ததும் கேரவனுக்குள் சென்று ஓய்வெடுக்காமல் படப்பிடிப்பு தளத்திலேயே அமர்ந்து மற்றவர்கள் நடிப்பை ரசித்துக்கொண்டிருப்பாரோ, அதேபோன்று 36 வயதினிலே படப்பிடிப்பின்போது ஜோதிகாவும் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்து மற்றவர்களின் நடிப்பை ரசித்தாராம். அவர்கள் சிறப்பான பர்பாமென்ஸ் கொடுக்கிறபோது கைதட்டி ஆரவாரம் செய்தாராம். அதை அப்படத்தின் பணியாற்றியவர்கள் இப்போதுவரை பெருமையாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.