ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணாதான் பெங்களூரு பெண்ணான காயத்திரியை அறிமுகப்படுத்தினார். அவர் இயக்கிய ஏன் இப்படி மயக்கினாய் படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் வெளிவரவே இல்லை.
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு காயத்ரி நடித்த 18 வயசு படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. நடுவுல கொஞ்சம் பக்கத்த கணோம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தாலும் அதுதான் அவருக்கு அடையாளமாக அமைந்தது. அதன் பிறகு கண்ணதாசன் பேரன் அறிமுகமான பொன்மாலை பொழுது படத்தில் நடித்தார். அதுவும் வெற்றி பெறவில்லை. மாந்தோப்பு என்ற படம் பூஜையுடன் நின்று விட்டது. அதன் பிறகு நடித்த ரம்மி படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இப்போது அவரின் கடைசி நம்பிக்கையாக இருப்பது மெல்லிசை படம்தான். இதில் அவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். காயத்திரி ஒரு கிதார் இசை கலைஞர், விஜய்சேதுபதி புகைப்பட கலைஞர் இருவருக்கும் இடையிலான கவித்துமான காதல் கதை. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி உள்ளார். படம் முடிந்து ஒரு வருடமாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. தற்போது ரிலீசுக்குரிய பணிகள் நடந்து வருகிறது. காயத்ரியின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற படமாக மெல்லிசை இருக்கும் என்பதால் அதன் வெளியீட்டை ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.