பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தையும் தயார் செய்து விட்டார் பார்த்திபன். அதற்கு கதை இருக்கு என்று டைட்டில் வைத்தார். ஒரு இயக்குனர் தன் மனதுக்கு பிடித்த கதையை படமாக இயக்க எப்படியெல்லாம் போராட வேண்டியது இருக்கிறது என்பது அந்த கதையின் கரு. இது தவிர வேறு சில ஸ்கரிப்டுகளும் வைத்துள்ளார். எல்லாமே தயாரிப்பாளர் கிடைத்தால் மறுநாளே ஷூட்டிங் போகிற மாதிரியான பக்கா ஸ்கிரிப்ட்கள்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை தயாரித்த நிறுவனமே அடுத்த படத்தையும் தயாரிக்கலாம் என்றிருந்த நிலையில் அந்த நிறுவனம் தயாரித்த இன்னொரு படம் தோல்வி அடைந்து விட்டதால் அவர்கள் இப்போது புதிய படம் தயாரிப்பதில் தயக்கம் காட்டி வருகிறார்கள். இதனால் பார்த்திபன் பல புதிய தயாரிப்பாளர்களை தேடி வருகிறார்.
இதற்கிடையில் இருக்கிற நேரத்தை வீணடிக்க விரும்பாமல் நடிக்க வரும் வாய்ப்புகளில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த வீரக்கால் தெய்வங்கள், பேட் பாய்ஸ் மலையாளப் படங்களைத் தொடர்ந்து மலையாளத்திலும் நடிக்க வாய்ப்பு குவிகிறது. தாதா இன் பேக் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். தமிழில் சமீபத்தில் மாசு படத்தில் நடித்தார். தற்போது நானும் ரவுடிதான், சூதாடி படங்களில் நடித்து வருகிறார். அடுத்து படம் இயக்கும் திட்டத்தில் இருப்பதால் நடிப்பையும் குறைத்து வருகிறார். இன்னும் ஓரிரு வாரத்தில் அவர் இயக்கப்போகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளிவரலாம் என்கிறார்கள்.