அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகியுள்ளவர் டினா அகுஜா. டினா அகுஜா பெயர், நமக்கு புதிதாக இருந்தாலும், இவர் பாலிவுட்டிற்கு புதியவர் அல்ல. ஏனெனில், பாலிவுட்டில் பல்லாண்டு காலமாக வெற்றிக்கொடி நாட்டியுள்ள நடிகர் கோவிந்தாவின் மகள் தான் இந்த டினா அகுஜா. செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படம், ஜூலை மாதம் 3ம் தேதி திரைக்கு வர உள்ளது. முதல் படத்தில் நடித்த அனுபவம்? படத்தில் தனது கேரக்டர் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டார்....
செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தை ஒத்துக்கொண்டதற்கான காரணம்?
செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தின் இயக்குநர் ஸ்மீப் காங் எனது நண்பர். பஞ்சாபி திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். அவருடைய இயக்கத்திலான படங்களை நிறைய பார்த்துள்ளேன். அப்போது தான் இவருடைய இயக்கத்தில் ஒருபடமாவது நடித்துவிடவேண்டும் என்று தீர்மானித்தேன். இந்நிலையில், ஸ்மீப் காங், பாலிவுட்டில் அறிமுகமாக உள்ள செய்தியை அறிந்தேன். இதனையடுத்து அவரை தொடர்புகொண்டு, தங்கள் படத்தில் நான் நடிக்க விரும்புவதாக தெரிவித்தேன். அப்போதுதான், ஸ்மீப் காங், செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தின் கதையை என்னிடம் கூறினார். இந்த படத்தின் கதையை, எனது தந்தையிடம் (கோவிந்தா) பகிர்ந்துகொண்டேன். உனக்கு கதை பிடித்திருந்தால், தாராளமாக செய் என்று கூறியதையடுத்து, இயக்குநரிடம் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.
பாலிவுட்டில் அறிமுகம் தற்செயலானதா?
பாலிவுட் திரையுலகில் அறிமுகம் ஆகும் எண்ணம் இல்லை. இது திடீரென்று நடந்த நிகழ்வு தான். எனக்கு நடிப்புத்துறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அப்பா கோவிந்தாவின் வழியில், நிறைய வாய்ப்புகளும் வந்தன. ஆனால், அந்த நேரத்தில் நான் நடிக்கும் மூடில் இல்லை. நான் நடிகையாகி உள்ளதால், எனக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உங்களின் அறிமுகத்திற்கு சிறிய பட்ஜெட் படத்தை தேர்ந்தெடுத்தது ஏன்?
செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படம், உண்மையிலேயே மிகச்சிறிய அளவிலான பட்ஜெட் படம் தான். பெரிய பேனர் படத்தில் அறிமுகமானால், நம்மீ்தான எதிர்பார்ப்பும் அதிகரித்துவிடும். இது அறிமுக நடிகர் நடிகைகளுக்கு பெரியளவில் மனச்சுமையை ஏற்படுத்திவிடும். அடுத்தடுத்த படத்திலும் இந்த சுமை தொடர்ந்து கொண்டே இருக்கும். இரண்டாவது படம் தோல்வியடைந்துவிட்டால், திரையுலக வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும். படத்தின் பட்ஜெட் நமக்கு முக்கியமில்லை....கதை தான் நமது அறிமுகத்திற்கு முக்கியம்.
படத்தில் உங்களது கேரக்டர் குறித்து..
செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தில் குர்பிரீத் என்ற பஞ்சாபி பெண் கேரக்டரில் நடித்துள்ளேன். படத்தில் எனது கேரக்டரும், எனது உண்மையான வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஏனெனில், நான் பாதி பஞ்சாபி பெண் தான்.....குர்பிரீத் வக்கீல். ஒருநாள் இவரிடம் வரும் நபர், தனது மனைவியிடமிருந்து விவகாரத்து வாங்கித்தருமாறு கேட்கிறார். இதற்கு குர்பிரீ்த் உதவி செய்கிறார். இந்நிலையில், இவர்களுக்கிடையில் காதல் மலர்கிறது. இதன்பின் நடக்கும் மாற்றங்கள் தான் படத்தின் மீதிக்கதை...
நிஜ வாழ்க்கையில் நீங்கள் எந்த கேரக்டர்?
நான் மிகவும் எளிமையானவள். எனக்கு திரையுலக நண்பர்கள் யாரும் கிடையாது. இருந்தாலும், அவர்களுடன் நட்பு வைத்துக்கொண்டதில்லை. எனது நண்பர்கள் அனைவரும் பிசினஸ்மேன்கள் தான்....எனக்கு நண்பர்கள் உடன் ஷாப்பிங் மற்றும் டிராவலிங் செய்ய மிகவும் பிடிக்கும். பிரண்ட்ஸ்களுடன் பேஸ்புக்கில், நீண்டநேரம் சாட் செய்துகொண்டிருப்பேன். இதுதான் என்னுடைய வாழ்க்கை....
தர்மேந்திராவுடன் இணைந்து நடித்தது குறித்து...
செகண்ட் ஹேண்ட் ஹஸ்பெண்ட் படத்தில், முக்கியமான கேரக்டரில் தர்மேந்திரா நடித்துள்ளார். அவருடன் இணைந்து நடித்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. முதலில் அவருடன் இணைந்து நடிக்கையில் மிகுந்த பதட்டமாக இருந்தது. பின் அவர் தான் என்னை ஆசுவாசப்படுத்தினார். எனக்கு நடிப்பை கற்றுக்கொடுத்தார். தர்மேந்திரா சிறந்த நடிகர். தர்மேந்திராவின் தீவிர ரசிகை எனது அம்மா. தர்மேந்திரா போன்றே அழகிய ஆண்குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று என் அம்மா என்னிடமே கூறியிருக்கிறார்.
உங்களுக்கு போட்டியாக எந்த நடிகை உள்ளார்?
நான் எந்த நடிகையும் போட்டியாக நினைக்கவில்லை. அலியா, ஸ்ரத்தா உள்ளிட்ட நடிகைகள் அவர்களது வேலையை செய்கிறார்கள். நான் என் வேலையை செய்கிறேன். இதில் எங்கு போட்டி இருக்கப்போகிறது. ஒருவர் தனக்கு போட்டியாக மற்றொருவரை நினைக்க துவங்கிவிட்டால், நமது இலக்கிலிருந்து நாம் விலகிச்செல்ல துவங்கிவிடுவோம். எனவே நான் யாரையும் போட்டியாக நினைப்பதில்லை, தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம், எனது பொன்னான நேரத்தை வீணாக்கிக்கொள்வதில்லை என்று டினா அகுஜா கூறினார்.