ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
''காதலில் சொதப்புவது'' எப்படி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாலாஜி மோகன்,அடுத்தப்படியாக துல்கர் சல்மானை வைத்து வாயை மூடி பேசவும் என்ற படத்தை இயக்கினார். வித்தியாசமான முயற்சியாக இந்தப்படம் இருந்தது. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக தனுஷை வைத்து மாரி என்ற படத்தை இயக்கியுள்ளார். தனுஷ், காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்துள்ளது. இதனிடையே மாரி படத்தினை ஜூலை 17ம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
அன்றைய தினம் இரண்டு ஆண்டுகளாக ரிலீஸாவதாக சொல்லப்பட்டு வந்த சிம்புவின் வாலு படமும், சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஜூலை 17ம் தேதி மும்முனை போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் ஜூலை 17ம் தேதி ரேஸிலிருந்து மாரி விலகிவிட்டதாக தற்போது தவகல் வெளியாகியுள்ளது. ''மாரி'' படத்தில் சில காட்சிகள் ரீ-ஷூட் எடுக்க வேண்டியிருப்பதால் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாக கூறப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயனும், சிம்புவும் மோத உள்ளனர்.