ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ஃபேன்டஸி கலந்த சரித்திரப் படமான 'புலி' படம் பற்றி கடந்த இரு நாட்களாக தேவையில்லாத வதந்தியை சில பூனைகள் பரப்பி வருகின்றன. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் இந்த வதந்தி அதிகமாகவே பரவி வருகிறது.
'புலி' படத்தின் கதையா, படத்தில் ராணியாக நடிக்கும் ஸ்ரீதேவியியை எதிர்த்து நின்று ஆட்சியைப் பிடிக்கும் நாடகக் கலைஞனாக விஜய் நடிக்கிறார். இதுதான் இந்தப் படத்தின் கதை என்றும் இது தற்போதைய அரசியல் சூழ்நிலைக்குப் பொருத்தமாகப் படமாக்கப்பபட்டுள்ளது என்றும் சிலர் தகவல்களை பரப்பி வருகிறார்கள். தீயாகப் பற்றிக் கொண்ட இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால், இது படத்தின் கதை இல்லையாம், விஜய்யைப் பிடிக்காத யாரோ சிலர் வேண்டுமென்றே இந்த வதந்தியை பரப்பி வருவதாகப் படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கெனவே 'தலைவா' பட விவகாரத்தில் நொந்து நூலாகிப் போன விஜய், மீண்டும் அப்படி ஒரு தவறைச் செய்ய மாட்டார் என்றே கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். கடந்த வாரம் விஜய் பிறந்த நாளன்று கூட அஜித் ரசிகர்கள் விஜய்யை மட்டம் தட்டி பல மீமீக்களை வெளியிட்டார்கள். மேலும் அன்று வெளியான 'புலி' டீசர் ஒரு நாளைக்கு பத்து லட்சம் ஹிட்ஸ் என யு டியூபிலும் சாதனை படைத்து வருகிறது. எனவே, அதையெல்லாம் பிடிக்காத எதிர் முகாமில் இருக்கும் சில ரசிகர்கள் இப்படி வதந்தி கிளப்பியிருக்கவும் வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே 'புலி' படம் 'பாகுபலி' படத்துக்கு முன்னாடி என்ன ஆகுமோன்னு சிலர் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் சிலர் 'புலி'யை எப்படியாவது 'பலி' கொடுக்க முயல்வதாகவே பேசிக் கொள்கிறார்கள்.