ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடித்துவரும் படம் 'திங்கள் முதல் வெள்ளி வரை'. இதில் ஜெயராம் மெகா சீரியலுக்கு கதை எழுதும் எழுத்தாளராக நடிக்கிறார். கதாநாயகி ரிமி டாமியோ தினந்தோறும் சீரியல் அத்தனையையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிடும் சீரியல் பைத்தியம் பிடித்த கிராமத்து பொண்ணு. இப்படி ஒரு காம்பினேசனை வைத்து இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடியாக தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் நடித்த நடித்தபோது ஜெயராமுக்கும் தனக்குமான சுவராஸ்ய சம்பவம் ஒன்றை ரிமி டாமி கூறியுள்ளார்..
அதாவது சீரியல் பைத்தியமான ரிமி டாமி பலவிதமான காமெடி கூத்துக்கள் பண்ணுவது போல ஒரு பாடல் காட்சியை படமாக்கியுள்ளார்கள். அதில் ஒரு காட்சியின்போது ஜெயராமின் கழுத்தில் தனது சுடிதார் துப்பட்டாவால் தமாஷாக இறுக்கவேண்டும். ஆனால் ரிமியோ கொஞ்சம் வேகமாகவே இறுக்கிவிட, கிட்டத்தட்ட சாவின் அருகிலேயே சென்று வந்துவிட்டாராம் ஜெயராம்..
ஆனால் இதுபற்றி ரிமியிடம் எதையும் காட்டிக்கொள்ளாத ஜெயராமை, அவரது கழுத்து சிவந்திருந்ததை வைத்து படத்தின் இயக்குனர் கண்டுபிடித்துவிட்டாராம். ஆனாலும் அதை ஒரு குறையாக அவரிடம் காட்டிக் கொள்ளவில்லையாம். அதேபோல, சாதாரணமாக ஜெயராமின் கைகளை பிடித்துக்கொண்டு பேசும்போது கூட ரிமி அழுத்தமாக பற்றுவதால் ஜெயராமின் கைகளில் ரிமியின் நகங்கள் பதிந்ததாகவும், அதையும் கூட ஜெயராம் பெரிதுபடுத்தாமல் பெருந்தன்மையாக விட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார் ரிமி டாமி.