ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சென்னையில் கியூபா திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சென்னை ரஷிய கலாச்சார மையத்தில் நாளை வரை நடக்கும் இந்த விழாவில், கியூபா நாட்டில் தயாரான முக்கிய படங்கள் திரையிடப்படுகிறது. இந்த படங்கள் வெளிமார்க்கெட்டில் டிவிடியாக கிடைக்காத அரிய படங்களாகும். உலக திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்த படங்களை தேர்ந்தெடுத்து திரையிடுகிறார்கள்.
இதனை இந்தோ சினி அப்ரியேஷன் அறக்கட்டளை பொதுச் செயலாளர் தங்கராஜ் துவக்கி வைத்தார். "உலகில் குறைந்த அளவே திரைப்படங்களை தயாரிக்கும் நாடுகள் கூட தங்கள் படத்தை வெளிநாடுகளில் திரையிட விரும்புகிறது. அதன் மூலம் தங்கள் நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பரப்ப விரும்புகிறது. திரைப்படத்தில் ஆர்வம் இல்லாத நாடுகள் கூட திரைப்படம் எல்லைகளை தாண்டிய மகத்தான ஊடகம் என்பதை உணர்ந்திருக்கிறது. எங்கள் அமைப்பின் சார்பில் இன்னும் பல நாடுகளின் திரைப்பட விழாக்களை நடத்த உத்தேசித்திருக்கிறோம்" என்றார் தங்கராஜ். "கியூபா படங்களை காண அனுமதி இலவசம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்படும்" என்று விழா நிர்வாகிகள் தெரிவித்தனர்.