ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'ஊரே யாருன்னு கேட்டா, உன் பேரை மைக்கு செட்டு போட்டு உறுமிக் காட்டு...காட்டு...' சென்னை கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் சிக்னலில் நின்றிருந்த அனைவரையும், திரும்பிப் பார்க்க வைத்தது, உரக்க ஒலித்த அந்த பாட்டு. பெருமையாய் அனைவரையும் பார்த்தபடி, தன் அலைபேசியை அமைதியாக்கினார் அந்த 36 பிளஸ் வயது பெண். பல உதடுகள், அந்தப் பாடலை முணுமுணுக்கத் துவங்கியிருந்த நிலையில், சிக்னல், பச்சைக்கு மாறியது. அடுத்த பத்தாவது நிமிடத்தில், அவர் வீட்டின் முன் நின்றோம்.
35 ஆண்டு கால இசை ஆசிரியை; பொறுப்புள்ள குடும்பத் தலைவி; வளர்ந்து வரும் பின்னணிப் பாடகர் பிரதீப்பின் தாய் என, பல அடையாளங்கள் அவருக்குண்டு என்றாலும், 'வாடி ராசாத்தி...' பாடல், மிகப்பெரும் அங்கீகாரத்தை அவருக்கு தந்திருக்கிறது. 'வாங்க...வாங்க...' அன்பாய் வரவேற்றார் 47 வயது லலிதா விஜயகுமார்.
நமக்கான சின்ன உபசரிப்புக்குப் பின்...
உங்களைப் பற்றி...
அப்பாவுக்கு கர்நாடக சங்கீதம் தான் உயிர். வீட்டுல அவர் பாடுறதைக் கேட்டு கேட்டு வளர்ந்த எனக்கும், இசை மேல தானா ஆர்வம் வந்திடுச்சு. திருவையாறு இசைக் கல்லூரியில முறைப்படி படிச்சுட்டு, இசை ஆசிரியர் பணியை ஆரம்பிச்சேன்; 35 ஆண்டுகள் ஓடிடுச்சு! ஆனா, என்னையும், சினிமா உலகத்தையும் இணைச்சு, ஒரு நிமிஷம் கூட நான் நினைச்சுப் பார்த்ததில்லை!
'36 வயதினிலே' வாய்ப்பு எப்படி?
என் பையன் பிரதீப்பும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் நெருங்கிய நண்பர்கள். இதனால, என்னோட இசை அனுபவம் சந்தோஷுக்குத் தெரியும். ஒருநாள், என் கணவர்கிட்டே, 'எனக்கு ஒரு வித்தியாசமான குரல் வேணும். ஆன்ட்டியை பாட அனுமதிப்பீங்களா?'ன்னு கேட்டான். அவர் உடனடியா சம்மதம் சொல்ல, சந்தோஷ் என்னை
ஜெயிக்க வைச்சிட்டான்.
முதல் சினிமா அனுபவம்...?
இந்த சந்தோஷத்தை சொல்ல, புதுசா ஒரு வார்த்தையை கண்டுபிடிச்சா தான் முடியும். உண்மையை சொல்லணும்னா, என்னை விட என் குடும்பத்துல உள்ளவங்க தான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறாங்க! பல வருஷங்களுக்கு முன்னாடி என்கிட்டே படிச்ச மாணவர்கள், எனக்கு வாழ்த்து சொல்றாங்க! நான் இழந்த பல பேரை, இந்த பாட்டு என்கூட சேர்த்து வைச்சிருக்கு!
உங்களுக்கான இந்த அங்கீகாரம் ரொம்ப தாமதமானதுன்னு நினைக்கிறீங்களா?
அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் ஒரு சாதாரண குடும்பத் தலைவி. இதுவரைக்கும், எனக்கான ஆசிரியர் வேலையையும், வீட்டு பொறுப்புகளையும் சந்தோஷமா கவனிச்சுட்டு இருந்தேன். இந்த திடீர் வாய்ப்பு, புகழ் எல்லாம், எனக்குள்ளே பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்குன்னாலும், எனக்குள்ளே இது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போறதில்லை. ஆனாலும், இந்த பேருக்கும், புகழுக்கும் காரணமான சந்தோஷுக்கு, நான் கடமைப்பட்டிருக்கேன்!
இந்த பிரபலம், உங்க ஆசிரியை பணிக்கு ஏதாவது இடையூறா இருக்குமா?
நிச்சயமா இருக்காது. ஏன்னா, இன்னும் மூணே மாசத்துல, நான் ஓய்வு பெறப் போறேன்.
ஒருவேளை, '36 வயதினிலே' படத்துல ஜோதிகா இல்லாம இருந்திருந்தா...?
இந்த அளவுக்கு பாட்டு பிரபலம் ஆகியிருக்குமாங்கறது சந்தேகம்தான். இருந்தாலும், சந்தோஷோட இசை, எனக்கான அங்கீகாரத்தை நிச்சயம் வாங்கிக் கொடுத்திருக்கும்!
உங்களை ரொம்ப சந்தோஷப்படுத்தின ஒரு பாராட்டு...
என் கணவரோட பாராட்டு! எப்பவுமே, நான் பாடினா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். 'ஏதாவது ஒரு பெரிய நிகழ்ச்சி நீ பண்ணணும்'னு, அடிக்கடி சொல்லிட்டு இருப்பார். இப்போ, பெரிய திரையில நான் பாடினதுல அவருக்கு ரொம்ப சந்தோஷம்! என் பையன் கூட, 'நீ தொடர்ந்து பாடும்மா'ன்னு சொல்லியிருக்கான்! பார்க்கலாம்...நல்ல வாய்ப்பு வந்தா, நான் பாடத் தயார்!