ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஆறாவது படமாக வெளிவர இருக்கும் 'மாஸு என்கிற மாசிலாமணி' படத்தின் டைட்டில் மாற்றப்பட்டதற்கு சில சூர்யா ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். 'மாஸ்' என்கிற டைட்டில்தான் படத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது, எதற்கு டைட்டிலை இப்படி மாற்றினீர்கள் என்று அவர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
அதற்கு வெங்கட்பிரபு தெரிவித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, “நண்பர்களே, டைட்டில் என்னவாக இருந்தால் என்ன ? டைட்டிலை எதற்கு மாற்றினோம் என்பது உங்களுக்குத் தெரியும். நாம்தான் எப்போதுமே 'மாஸ்'. டைட்டிலே போடாம முதல் பார்வை, இரண்டாம் பார்வையை வெளியிட்டோமே மறந்துட்டீங்களா,” என சமாதானப்படுத்தியுள்ளார்.
ஆனால், அதற்குள் சில சூர்யா எதிர்ப்பாளர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கிண்டலான மீமீக்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். 'அஞ்சான்' படத்திற்கும் இதையேதான் அவர்கள் செய்தார்கள். 'மாஸ்' குழு உடனே சுதாரித்துக் கொண்டால் நல்லது. ஒரு படம் வெளிவரும் போது அந்தப் படத்தின் நாயகனின் எதிர்கோஷ்டியினர் இப்படி சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே ஜாலிக்கா என்ற பெயரில் சம்பந்தப்பட்டவர்களை நோகடித்து வருவது வாடிக்கையாகிவிட்டது.
அஜித் படம் வந்தால் விஜய் ரசிகர்களும், விஜய் படம் வந்தால் அஜித் ரசிகர்களும், சூர்யா படம் வந்தால் அஜித், விஜய் ரசிகர்களும் கிண்டலடிப்பது தொடர்கதையாகி வருகிறது.