ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்புவை சில மாதங்கள் மட்டுமே காதலித்த நயன்தாரா, அதன்பிறகு அவரை விட்டு பிரிந்தவர் சினிமாவில் மின்னல் வேகத்தில் வளர்ந்து நின்றார். அதிலும் பில்லா படத்துக்கு பிறகு அவருக்கு ஏராளமான இளவட்ட ரசிகர்கள் கிடைத்தனர். அதனால் பின்னர் ரசிகர்களை கருத்தில் கொண்டு படத்துக்கு ஒரு பாடலிலாவது படுகவர்ச்சியாக நடிப்பதை தனது பாணியாக்கிக்கொண்டார் நயன்தாரா.
அப்படி நடித்து வந்தவர் பின்னர் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளயிருந்தபோது படங்களை குறைத்துக்கொண்டதால் அவரது மார்க்கெட் சரிந்தது. ஆனால், அதையடுத்து அவரை விட்டு நயன்தாரா பிரிந்து விட்டார் என்றதும் படங்களுக்கு அவரை மாறி மாறி புக் பண்ணினார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிசியான நடிகையானார் நயன்தாரா.
அந்தவகையில், இப்போது இன்னும் அதிகப்படியான படங்களை கைப்பற்றியிருக்கும் நயன்தாராவின் படக்கூலியும் 2 கோடியில் இருந்து 3 கோடி அளவுக்கு எகிறி நிற்கிறது. இதைப்பார்த்து மற்ற நடிகைகளை விட ஹன்சிகாதான் ரொம்பவே பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார். காரணம், எப்படி நயன்தாரா காதலில் விழுந்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தாரோ,அதேபோல்தான் ஹன்சிகாவும் சிம்புவுடன் காதலில் விழுந்து சில மாதங்களிலேயே தெளிவு பெற்று நடிக்க வந்தார்.