சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
வெளிவருதற்கு முன்பே தேசிய விருது பெற்ற படம் குற்றம் கடிதல். அதனை இயக்கி இருப்பவர் பிரம்மா. கல்லூரி நாட்களிருந்தே நாடகத்தில் ஈடுபாடு கொண்ட பிரம்மா. படித்து முடித்து விட்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழகத்தில் பணியாற்றினார். எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக பல நாடகங்களை நடத்தினார். குறும்படங்கள் இயக்கினார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் நண்பர்களுடன் இணைந்து குற்றம் கடிதல் படத்தை இயக்கினார். அது தேசிய விருது வரைக்கும் வந்துவிட்டது. அடுத்து அவர் பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் முடிவில் இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: குற்றம் கடிதல் ஒரு கமர்ஷியல் படமாகத்தான் எடுக்கப்பட்டது. தியேட்டர்களில் திரையிட்டு நாலு காசு பார்த்து தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்க வேண்டும் என்றுதான் அந்தப் படத்தை இயக்கினேன். படத்தை வாங்கிய ஜேஎஸ்கே சதீஷ்குமார்தான் இது விருதுக்குரிய படம் என்று பல படவிழாக்களுக்கு எடுத்துச் சென்று தேசிய விருது வரைக்கும் கொண்டு வந்தார்.
ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவம் அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதுதான் படத்தின் கதை. எல்லோருமே புதுமுகங்கள்தான் நடித்துள்ளார்கள். இந்த படத்துக்கு நிறைய விருதுகள் கிடைத்தாலும் நான் விருதுக்காக படம் இயக்கவில்லை. எனது அடுத்த படம் பெரிய ஹீரோ நடிக்கும் படமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் பெரிய ஹீரோக்கள் மூலம் சொல்லும்போது அதன் ரீச் இன்னும் அதிகமாக இருக்கும். பெரிய ஹீரோக்களிடம் கதை சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை வரவைக்க வேண்டும். அதை செய்ய என்னால் முடியும் என்று நம்புகிறேன் என்கிறார் பிரம்மா.