ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'இது என்ன மாயம்' படத்திற்குப் பிறகு விஜய், பிரபுதேவா தயாரித்து நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமலா பாலை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என பிரபுதேவா சொன்னதை விஜய்யும் ஏற்றுக் கொண்டுள்ளாராம். இப்போது கணவர் விஜய் இயக்கத்தில் 'தெய்வத் திருமகள், தலைவா' படங்களுக்குப் பிறகு மீண்டும் அமலா பால் நடிக்க உள்ளார். திருமணத்திற்குப் பிறகும் அமலா பால் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
ஹிந்திப் படங்களைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவா திடீரென தமிழில் படங்களைத் தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக அவரே நாயகனாக நடிக்கும் படத்தை முதலில் தயாரிக்க உள்ளார். அதன் பின் முன்னணி நடிகர்கள், மற்ற இயக்குனர்கள் இயக்கும் படங்களையும் தயாரிக்க உள்ளார் என்கிறார்கள்.
பிரபுதேவா மீண்டும் நடனமாடி, இளம் நாயகனாக நடிப்பாரா அல்லது கொஞ்சம் மெச்சூரிட்டியான கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்பது பற்றி இனிமேல்தான் தெரிய வரும் என்கிறார்கள்.