ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
காஷ்மீர், நாட்டின் மிக அழகிய இடம். நான் இந்த இடத்தை மிகவும் விரும்புகிறேன். இந்த அழகிய இடத்தைவிட்டு, சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பிற்கு செல்லும் திரையுலகத்தினரை, முட்டாள்கள் என்றே கூற வேண்டும் என்று பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் கூறியுள்ளார்.
சல்மான் கான், கபீர் கான் இயக்கத்தில் உருவாகி வரும் பஜ்ரங்கி பைஜான் படத்திற்காக, தற்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ளார்.
படப்பிடிப்பின் இடையே பத்திரிகையாளர்களை சந்தித்த சல்மான் கான் கூறியதாவது, காஷ்மீர், இந்த பூமியின் மிகவும் அழகான பகுதி. நான் இந்த அழகிய பகுதிக்கு, சூட்டிங்கிற்காக வந்துள்ளேன். இந்த அழகிய பகுதியை காண மீண்டும் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த காஷ்மீரின் அழகை பார்க்காதவர்கள், இந்த உலகில் எந்தவொரு அழகையும் பார்க்காதவர்கள் என்பேன் என்று சல்மான் கான் கூறினார்.