ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இவரது பெயரில் உள்ள கதிர் போலவே, இவருக்கு தொழில்...கதிரும் (ஒளி) கதிர் சார்ந்த விஷயங்களும் தான்!. தமிழ் சினிமாவில், ஒளியில் விளையாடும் வல்லவர்களில் இவரும் ஒருவர். கற்றது தமிழ் படம் மூலம் இவருக்கு கிடைத்த பளிச் அடையாளத்தை , சுப்ரமணியபுரம், நாடோடிகள், ஈசன், போராளி ஆகிய படங்களில் தக்கவைத்துக்கொண்ட திறமைமிகு ஒளிப்பதிவாளர். சமீபத்தி்ல், ராஜதந்திரம் படம் மூலம், இவரின் கைவண்ணம் கைதட்டல் வாங்கியிருக்கும் நிலையில், லென்ஸ் எனும் இந்திய - ஆங்கில படத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
இப்ப இருக்கிற காலகட்டத்துல, ஒளிப்பதிவாளரா இருக்கிறது சுலபம் இல்ல ; அதேநேரத்துல , கஷ்டம் கிடையாது எனும் அர்த்தம் பொதிந்த வார்த்தைகளுடன், யதார்த்தமாய் நம்மிடம் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர்.
ஒரு படத்தி்ல், ஒளிப்பதிவின் பங்கு என்பது?
ஒரு காட்சி, பார்க்கிறதுக்கு நல்லா இருந்தாலே, அதுக்கு ஒளிப்பதிவு தான் காரணம்னு ஒரு பொதுவான கருத்து இருக்கு.ஆனா, அது உண்மையில்லை! சில் படங்களோட திரைக்கதை, தெள்ளத்தெளிவா இருக்கும் ; ஒளிப்பதிவுல இதுதான் இருக்கணும்னு தீர்க்கமா சொல்லிடும். ஆனா, சில திரைக்கதைகள் அப்படி அமையாது. அந்த படத்துல வர்ற காட்சிகளுககு, நாம எவ்வளவு தான் மெனக்கெட்டாலும் காட்சி சிறப்பா அமையாது. இந்தவகையில, திரைக்கதை தான் ஒளிப்பதிவு ஜொலிக்கிறதுக்கு முக்கிய காரணம்!
லென்ஸ் படத்துல என்ன சிறப்பு?
இன்றைய காலகட்டத்துல, சமூக வலைதளங்கள்ல நடக்கிற அநியாயங்களைப் பத்தி சொல்கிற ஒரு படம். இயக்குநர் பேரு, ஜெயபிரகாஷ் ராஜ். குறைஞ்ச பட்ஜெட்ல எடுக்கிற நல்ல படம். அதான், யோசிக்காம சரின்னு சொல்லிட்டேன்!
ராஜதந்திரம் படத்தில் ஏதேனும் சுவாரஸ்யம்?
குறைஞ்ச பட்ஜெட்ல எடுக்கிற படத்தை, ஒசத்தியா காட்டணும்ங்கறது தான், எங்களுக்கு இருந்த ஒரே எண்ணம்! ஹீரோ அர்ஜூனும், அவன் நண்பர்களும், நகைகளை திருடுறப்போ, அவங்க மூணு டார்ச் வைச்சிருக்கிற மாதிரி காமிச்சிருப்பேன். திரைக்கதைப்படி, அப்படியில்லை ; ஆனா, ஒளிப்பதிவோட சுவாரஸ்யத்திற்காக திரைக்கதை அனுமதிச்ச விஷயம் அது!
சசிக்குமார் - சமுத்திரக்கனி - கதிர் நட்பானது எப்படி?
மவுனம் பேசியதே படத்துல, இயக்குநர் அமீரோட உதவி இயக்குநர் சசிக்குமார் ; ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கு உதவியா, நான்! இப்படித்தான் நாங்க நண்பர்கள் ஆனோம். சசிக்குமாரோட நண்பர் சமுத்திரக்கனி! நண்பனோட நண்பன் எனக்கும் நண்பன் இல்லையா ; இந்த அடிப்படையில, மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நம்புறோம் ; தொடர்ந்து சேர்ந்து வேலை செய்றோம்! இந்த கூட்டணி தவிர, கற்றது தமிழ், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், ராஜதந்திரம் படங்களுக்கு, மற்ற இயக்குநர்களோட சேர்ந்தும் வேலை பார்த்திருக்கேன்.
உங்கள் ஒளிப்பதிவின் அடையாளம்?
முதல் விஷயம், என் ஒளிப்பதிவு எந்த மரபுகளையும் பின்பற்றாது. அப்புறம், ஒரு உலக சினிமா பார்த்துட்டு, அந்த படத்துல வர்ற மாதிரியே காட்சிகள் அமைக்கிற டிரெண்டு, எனக்கு சுத்தமா பிடிக்காது. என் கற்பனைத்திறன்ல இருந்து உருவாகுற விஷயத்தை, காட்சிப்படுத்தணும் ; இதுதான், எப்பவுமே என்னோட விருப்பம்!
உங்களை வியக்க வைத்த ஒளிப்பதிவாளர்கள்?
விடியும் முன் படத்துல, சிவகுமார் விஜயன் பண்ணியிருந்த ஒளிப்பதிவு நேர்த்தியா இருந்தது. அப்புறம், நான் மிகவும் மதிக்கிற, நேசிக்கிற, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஓ.கே.கண்மணியில கலக்கியிருந்தாரு. காட்சிக்கு காட்சி இருக்கிற தொடர்பை, ஒளிக்கலவையும் சரியா சொல்லணும். அதை, பி.சி.யோட ஒளிப்பதிவு எப்பவுமே கச்சிதமா பிரதிபலிக்கும். இதுலேயும், அமர்க்களமா இருந்தது!
இயக்குநராகும் எண்ணம்...?
இப்போதைக்கு இல்லை!