ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முகமூடி படத்துக்குப்பின் தமிழில் கொஞ்சம் இடைவெளிவிட்டு ஒதுங்கிய நரேன் தற்போது மலையாளத்தில் 'ஹல்லேலூஜா' என்கிற படத்தில் மனோதத்துவ டாக்டராக நடித்து வருகிறார். சொந்த கிராமத்தை விட்டு சிறுவயதிலேயே பிரிந்துபோன நரேன், இருபது வருடங்கள் கழித்து ஒரு டாக்டராக கிராமத்துக்கு வருகிறார். இதன் பின்னணியில் கதை பின்னப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தில் நரேனுக்கு ஜோடியாக நடிக்கிறார் மேக்னா ராஜ்.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் கேரள காவல்துறை அசிஸ்டன்ட் டி.ஜி.பியான சந்தியா ஐ.பி.எஸ், இந்தப்படத்திற்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.. இந்தப்படத்தை இயக்கம் சுதி அன்னாவுக்கு சந்தியா நன்கு பழக்கமானவர். தனது கவிதை எழுதும் திறமையால் போலீஸ் வட்டாரங்களில் ரொம்பவே பாப்புலரானவர் சந்தியா. அதுமட்டுமல்ல இலக்கியம் சம்பந்தமாக ஐந்து நூல்களையும் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, கேரளா போலீஸ் வரலாறு பற்றிய வெப்சைட் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.