ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'நான் ஈ' படத்தின் வெற்றி இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி கடந்த இரண்டு வருடங்களாக பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் 'பாகுபலி'. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது. முதலில் மே மாதம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தப் படத்தை ஜுலை மாதம்தான் வெளியிட உள்ளனர். படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள், எஃபெக்ட்ஸ் காட்சிகள் ஆகியவற்றின் பணிகள் இன்னும் முடியாததே கொஞ்சம் தாமதமான வெளியீட்டிற்கான காரணம் என ராஜமௌலி கடந்த வாரம் அறிவித்தார்.
அதோடு அவர் அறிவித்தபடி படத்தின் போஸ்டர்களை கடந்த சில நாட்களாக ஒன்றன்பின்ஒன்றாக வெளியிட்டு வருகிறார்கள். மே 1ம் தேதி இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. சற்று முன்னர் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். நடிகர் பிரபாஸ் ஒரு சிவலிங்கத்தைத் தூக்கிக் கொண்டு நடப்பது போன்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ராஜமௌலி கூடவே,
“கங்கையை ஏந்திடும் சிவனை
தோளினில் ஏந்திடும் இவனை
யார் எனப் பார்த்திடும் ஞாலம்
ஒரு கணம் நின்றிடும் காலம்”
என்ற பாடலையும் சேர்த்து தமிழில் டிவீட் செய்துள்ளார்.