ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2003ல் மனசினக்காரே என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பிறகு இரண்டு மலையாள படங்களில் நடித்தவர் 2004 இறுதியில் ஹரி இயக்கிய ஐயா என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தபடி தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். முதல்படமே ஹிட்டாக அமைந்ததால் தமிழில் ராசியான ஹீரோயினியாக கருதப்பட்ட நயன்தாரா, அதையடுத்து விஜய், அஜித், ரஜினி என மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடி முன்னணி நாயகியானார். அந்த வகையில், கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கிறார் நயன்தாரா. இப்போதும் முன்னணி ஹீரோக்களுடன் பிசியாக நடித்து வருகிறார். ஆனால், பெரும்பாலும் தான் நடிக்கிற முக்கியத்துவம் வாய்ந்த கிளாமர், ரொமான்ஸ் காட்சிகளின்போது சுற்றியிருக்கிற கூட்டம் தன்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பது நயன்தாராவுக்கு எப்போதுமே பிடித்தில்லையாம்.