பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, பட தயாரிப்பாளர் ஆக திட்டமிட்டிருப்பதாக விஜயலெட்சுமி கூறியுள்ளார்.
தமிழ் திரைப்பட இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகளான விஜயலெட்சுமி, வெங்கட்பிரபுவின் அறிமுக படமான சென்னை -28லிலேயே இவரும் அறிமுகம் ஆனார். பின் அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். வனயுத்தம் படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆடாம ஜெயிச்சோமடா விஜயலட்சுமி கடைசியாக ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் நடித்திருந்தார். படங்களை அவசரப்பட்டு தேர்வு செய்யமாட்டேன். எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார் விஜயலட்சுமி. விஜயலட்சுமி விஜயலட்சுமியை சில காலமாக படங்களில் காணவில்லையே என்று ரசிகர்கள் நினைத்தனர். சரி அவருக்கு பிடித்த கதாபாத்திரம் கிடைக்கவில்லை போன்று, கிடைத்தவுடன் நடிக்க வருவார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஓய்வு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார் விஜயலட்சுமி. இது குறித்து அவர் கூறுகையில், இனி நான் படங்களில் நடிக்க மாட்டேன். நடிப்பை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளேன் என்றார். தயாரிப்பு படங்களில் நடிக்காவிட்டாலும் திரைத் துறையில் தான் இருப்பேன். நான் படங்களை தயாரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். இனி என்னை தயாரிப்பாளராக நீங்கள் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.