ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அலைகள் ஓய்வதில்லை படத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் கார்த்திக். அவரைப்போலவே ராதாவும் அந்த படத்தில்தான் அறிமுகமானார். பாரதிராஜாவின் மோதிரக்கையினால் குட்டுப்பட்ட அவர்கள் இருவருமே பின்னர் முன்னணி நடிகர் நடிகையாக வலம் வந்தனர்.
இதில் கார்த்திக் தனக்கென ஒரு பாணியில் நடித்து ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தார். ஆனால், மார்க்கெட் ஓரளவு தொய்வடைகிறது என்றதும் அரசியலில் பிரவேசித்தார். அதன்காரணமாக அவருக்கென இருந்த மார்க்கெட் முற்றிலுமாக சரிந்து விட்டது. அதையடுத்து அவர் அனேகன் உள்பட சில படங்கள் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தபோதும் அவரால் விட்ட இடத்தை பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், மணிரத்னத்தின் கடல் படத்தில் அறிமுகமான அவர் மகன் கெளதம், பின்னர் என்னமோ ஏதோ என்ற படத்திலும் நடித்தார். இப்போது அவர் நடிப்பில் வை ராஜா வை படம் திரைக்கு வரத் தயார் நிலையில் உள்ளது. அதோடு, இந்திரஜித், சிப்பாய், ரங்கூன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார் கெளதம்.
ஆனால், அப்பா பாணியில் இல்லாமல் தனக்கென ஒரு பாணியை உருவாக்க முயற்சித்து வரும் கெளதமிடம், உங்கள் அப்பா விட்டுச்சென்ற இடம் இன்னும் அப்படியேத்தான் உள்ளது. அதை நீங்கள்தான் பிடிக்க வேண்டும் என்று கார்த்திக்கின் அபிமானிகள் சிலர் வலியுறுத்துவதோடு, உங்கள் தந்தையின் ரசிகர்கள் அதற்காகவே வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறர்கள் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் அப்பா இடத்தை தன்னால் நிரப்ப முடியுமா? என்கிற சந்தேகம் இருந்தாலும், மற்றவர்கள் உற்சாகப்படுத்துவதால் அந்த இடத்தை கைப்பற்றுவேன் என்று புதிய உத்வேகத்தில் செயல்படத் தொடங்கியிருக்கிறார் கெளதம்.