ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமல் நீரத் மலையாள சினிமாவில் அருமையான ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, திறமையான இயக்குனரும் கூட. அதனால் தான் மலையாளத்தில் நடிக்கலாமா என்று யோசித்த பிரகாஷ்ராஜே கூட இவர் இயக்கிய 'அன்வர்' படத்தில் நடித்துக்கொடுத்தார். சில மாதங்களுக்கு முன் இவர் இயக்கத்தில் வெளியான 'அயூப்பிண்டே புஸ்தகம்' பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. மம்முட்டியை வைத்து 'பிக் பி' படம் மூலம் இயக்குனராக மாறிய அமல் நீரத், இப்போது துல்கர் சல்மானை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார். அப்படியானால் மம்முட்டியையும், பிருத்விராஜையும் வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் 'குஞ்சாலி மரைக்காயர்' வரலாற்றை அமல் நீரத் படமாக்கப்போவதாக வந்த செய்தி உண்மையில்லையா..? உண்மையோ, பொய்யோ.. இப்போதைக்கு அதை தள்ளிவைத்துவிட்டு துல்கர் படத்தை இயக்குவதில் தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே 'அஞ்சு சுந்தரிகள்' என்கிற ஆந்தாலாஜி படத்தின் (குறும்படங்களை ஒருங்கிணைத்த படம்) ஐந்து எபிசோடுகளில் 'குள்ளண்டே பார்யா' என்கிற குறும்படத்தில் துல்கரை வைத்து இயக்கியிருந்தார் அமல் நீரத். இப்போது முழு நீளப்படமாகவே இயக்கவுள்ளார். இந்தப்படத்தில் துல்கர் சல்மான் டான்சராக நடிக்க இருக்கிறார். இதுவரை துல்கர் நடித்த படங்கள் எதிலும் அவர் அவ்வளவாக டான்ஸ் ஆடியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.