ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார் ரேஸ் போலவே அஜித்திடம் பல தனித்திறன்கள் உள்ளன. அதில் போட்டோகிராபியும் ஒன்று. தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் கேமராவை எடுத்துச்செல்கிறார். அங்கே இயற்கையாக காணும் காட்சிகளை படம் பிடித்துவிடுவார். இப்படி எடுத்த படங்களை சேமித்துவைத்திருக்கிறார்.அதே போல, என்னை அறிந்தால் படப்பிடிப்பு நடந்தபோது படப்பிடிப்பு தளங்களில் கண்ட ஏராளமான காட்சிகளை படம் பிடித்துவைத்துள்ளார். அதுமட்டுமில்லை, இரண்டாவது கேரக்டரில் நடித்த பார்வதி நாயரை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துளார் அஜித். இந்த படங்களை பார்வதி நாயர் பிரேம்செய்து தன் வீட்டில் ஏகப்பட்ட இடங்களில் மாட்டியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட தல, பார்வதியை பாராட்டியதோடு தற்போது தான் நடித்துவரும் படத்தில் பார்வதிக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு எடுத்து படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு போன் செய்துள்ளாராம். படத்தால் கிடைத்த படவாய்பை நினைத்து நெகிழ்ந்து போனாராம் பார்வதி நாயர்.