ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா. சின்னத்திரையிலும், பொது மேடைகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ரம்யா நடனம், நடிப்பு எதிலும் ஈடுபாடு காட்டவில்லை. பல இயக்குனர்கள் நடிக்க கேட்டும் நடிக்கவில்லை. ஆனால் தற்போது திருமணத்துக்கு பிறகு நடனம், நடிப்பு இரண்டிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கி வெளிவந்துள்ள ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மான் தோழியாக நடித்துள்ளார். நடிப்பை தொடர்ந்து இப்போது நடனத்திலும் குதித்திருக்கிறார்.
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் ஜோடி நம்பர் ஒண் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த ரம்யா முதன் முறையாக அந்த நிகழ்ச்சியில் ஆடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் 12 வருடமாக முறைப்படி கிளாசிக்கல் நடனம் கற்றவள். சின்னத்திரை தொகுப்பாளினியான பிறகு நடனத்தை கைவிட்டு விட்டேன். என்றாலும் நடன இயக்குனர் சாண்டி ஒரு கான்செப்டை சொல்லி நீ கண்டிப்பாக ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த கான்செப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒப்புக் கொண்டேன். நான் நன்றாக ஆடியதாக எல்லோரும் சொன்னார்கள். அதனால் தொடர்ந்து ஆடவும் நல்ல கேரக்டர்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறேன். என்றார் ரம்யா.