ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் வெளியாகும் தொலைக்காட்சி சேனல்களில், வடஇந்தியா மொழிகளில் வெளியான டப்பிங் சீரியல்களின் ஆக்கிரமிப்பு சமீபகாலமாக அதிகரித்து விட்டது. ஒரு மெகா சீரியலை தயாரிப்பதை விட டப்பிங் செய்து வெளியிடுவது செலவு குறைவு என்பதால் அதில் பல சேனல்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு, தமிழ் தொடர்களை விட, வடஇந்திய தொடர்கள் சினிமாவுக்கு இணையாக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டிருப்பதால், தற்போது தமிழ் டிவி தொடர்களை விட மாற்று மொழி தொடர்களையே நேயர்களும் அதிகமாக பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் படிப்படியாக தமிழில் தொடர்கள் தயாரிக்கப்படுவது குறைந்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக இங்குள்ள சின்னத்திரை நடிகர்- நடிகைகளுக்கு வேலை வாய்ப்பும் குறைந்து விட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மற்றும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கமும் நேற்று முன்தினம் சென்னையில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் கடைபிடித்தனர். அதோடு, டப்பிங் சீரியல்களை அதிகமாக ஒளிபரப்பு செய்யும் 8 சேனல்களுக்கு நடிகர் நடிகைகள் நேரில் சென்று டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பக் கூடாது மனு கொடுத்தனர்.