ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், கேரள பிலிம் சேம்பரும் இணைந்து தங்களுக்கென்று தனியான தொலைக்காட்சி சேனல் ஒன்றை அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இதற்கான பணிகளை இப்போது தொடங்கியிருக்கிறது. 300 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படும் இந்த சேனலின் 51 சதவிகித பங்குகளை இரண்டு சங்கங்களும் வைத்துக் கொண்டு மீதியை பப்ளிக் ஷேராக வெளியிட இருக்கிறது. முழுக்க முழுக்க சினிமா சேனலாக தொடங்கப்படும் இதில் புதிய, பழைய திரைப்படங்கள், நட்சத்திர பேட்டிகள், நிகழ்ச்சிகள். சினிமா டிரைலர்கள், விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.
"மலையாளத்தில் ஆண்டுக்கு 100 முதல் 130 படங்கள் வரை வெளிவருகிறது. ஆனால் தொலைக்காட்சிகள் 10 சதவிகித படத்தை கூட வாங்குவதில்லை. பெரிய நடிகர்கள் நடித்த படங்களை மட்டுமே வாங்குகிறது. சினிமாவால் வாழும் சேனல்கள், சினிமாகாரர்களுக்கு உதவுவது இல்லை. தங்கள் வியாபாரத்தையும், அதில் லாபத்தையும் மட்டுமே பார்க்கிறார்கள். இதனால்தான் தயாரிப்பாளர் சங்கம் சேனல் தொடங்குகிறது. வெளியாகும் அனைத்து படங்களையும் வாங்கி ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறோம். படம் ஒளிபரப்பாகும்போது அதன் இடையில் ஒளிபரப்பாகும் விளம்பர வருமானத்தின் ஒரு பகுதியை தயாரிப்பாளர்களுக்கு தர இருக்கிறோம். படங்களின் சேட்டிலைட் உரிமத்தை பெற தனியாக குழு ஒன்றையும் அமைக்கிறோம். இவை பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வரும்" என்கிறார் தயாரிப்பாளர் சங்க முக்கிய நிர்வாகி ஒருவர்.
தயாரிப்பளார் சங்கமே தனி சேனல் தொடங்க இருப்பதால் கேரளாவில் உள்ள மற்ற தனியார் சேனல்கள் கலக்கத்தில் உள்ளன. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கென்று தனி சேனல் தொடங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே திட்டமிட்டிருக்கிறது. அது இன்னும் ஆரம்பகட்டதுக்குகூட வரவில்லை. ஒரு வேளை கேரளாவில் தொடங்கப்பட்ட பிறகு அதன் அனுபவங்களை வைத்து இங்கு தொடங்கலாம் என்று தெரிகிறது.