ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'சுதந்திர இசைத்துறையில், நீங்கள் உங்களை நிரூபித்து விட்டீர்கள்' - உலக இசைக்கலைஞர் ரிக்கி கேஜ், 'கிராமி' விருது வென்றவுடன், ஏ.ஆர்.ரஹ்மான், அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி இது! உலக இசையில் சாதனை படைக்கும் இசைக்கலைஞர்களுக்கான, உயரிய 'கிராமி' விருதை வென்ற நான்காவது இந்தியர், ரிக்கி கேஜ்! சுதந்திர இசைக்கலைஞரான இவர், தன் நண்பர் வூட்டர் கெல்லர்மேனுடன், ஐந்து கண்டங்களின் காடு, மலை, நாடு தாண்டிச் சென்று, இரண்டு ஆண்டுகளாக சேகரித்த 'விண்டஸ் ஆப் சம்சாரா' என்ற இசை ஆல்பத்திற்கு தான், இந்த 'கிராமி' கவுரவம் கிடைத்திருக்கிறது! பெங்களூரில் வசிக்கும் இவர், ஒரு இசைப்பணிக்காக, சமீபத்தில் சென்னைக்கு வருகை தர, அவரை சந்தித்தோம்.
எங்கிருந்து துவங்கியது உங்கள் இசையின் திசை?
சிறுவயது முதல், இசையின் பக்கம்தான் எனக்கு ஈர்ப்பு! தொலைக்காட்சி பார்ப்பதை விட, ரேடியோவில் பாடல்கள் கேட்பது, எனக்கு பிடித்த பொழுதுபோக்கு! சினிமா பார்க்கும்போது கூட, நான் பின்னணி இசையைத் தான் அதிகம் பின்பற்றுவேன். பெற்றோர்களுக்காக, 'பல் மருத்துவம்' படித்தேன் என்றாலும், 'இசை தான் என் வாழ்க்கை' என, எப்போதோ முடிவெடுத்து விட்டேன்.
'விண்ட்ஸ் ஆப் சம்சாரா'வின் நோக்கம்?
தென் ஆப்ரிக்காவின் இசைக்கலைஞர் வூட்டர் கெல்லர்மேனை, மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்தேன். அவரது இசை, எனக்கு நல்ல பரிச்சயம்! நாங்கள் இருவரும் இணைந்து, அவரவர் நாடுகளின் கலாசாரத்துடன், அமைதியை எடுத்துரைக்கும் வகையில், 'விண்டஸ் ஆப் சம்சாரா' உருவாக்க விரும்பினோம். மகாத்மா காந்தி - நெல்சன் மண்டேலா ஆகிய இருவரின் கொள்கைகளுடன் பயணிக்கும் இசை முயற்சி அது! உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுத்த, 120 இசைக்கலைஞர்களால் பிறந்த இசை வடிவம் அது!
இசை மூலம் 'அரசியல் தாக்கம்;' சாத்தியமா என்ன?
பெர்லின் சுவர் வீழ்ந்த போது, 'ஸ்கார்பியன்ஸ்' இசைக்குழுவின், 'விண்ட்ஸ் ஆப் சேஞ்ச்' என்ற பாடல்தான் மிகப்பெரும் அரசியல் தாக்கத்தை உண்டாக்கியது; அதேபோல், அமெரிக்காவில், 'இரட்டை கோபுர தாக்குதல்' சம்பவம் நிகழ்ந்த போது, 'என்யா' என்ற இசைப்பாடகியின், 'ஒன்லி டைம்' என்ற பாடல், பெரும் ஆறுதலாக அமைந்தது. ஆக, உங்கள் கேள்விக்கான பதில், இந்த சாட்சிகள்தான்!
பொதுநல சிந்தனையோடு இருக்கிறீர்கள்; அரசியலில் குதிக்கும் எண்ணம் உண்டா?
சமீபத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.கே.ரவி கர்நாடகாவில் மரணித்த சம்பவம் தொடர்பாக, ஒரு இசைப்பதிவு செய்து, 'யூ-டியூபில்' பதிவேற்றினேன்; அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உதவி பெற்று தரும் நோக்கில், 'டூ யுனைட் ஆல்' என்ற இசை ஆல்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இது போன்று, சமுதாயத்தில் நிலவும் பிரச்னைகளை என் இசையால், உலக மக்களிடம் கொண்டு சேர்ப்பேனே தவிர, அரசியலில் ஈடுபட மாட்டேன்!
இந்தியாவில் இசைக்கான முக்கியத்துவம்?
இங்கு திரைப்படப் பாடல்கள் மட்டுமே பெரிதும் கவனிக்கப்படுகின்றன. குறிப்பாக, சுதந்திர இசைக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது! சமூக பிரச்னைகளுக்காகவும், இங்கு பாடல்கள் பிறக்க வேண்டும் என்பது என் விருப்பம்!
சரி... எங்களின் 'குத்துப்பாட்டு' பற்றி...?
நான் இசையமைத்த, 'பேரி டிரம்ஸ்' எனும் ஆல்பத்திலேயே, இரண்டு குத்துப்பாடல்கள் உண்டு. குத்து பாடல்கள், தனித்துவமானவை! ஒருவர் எவ்வளவு சோகமாக இருந்தாலும், அதை சந்தோஷமாக மாற்றும் வலிமை, இப்பாடல்களுக்கு உண்டு. அந்த வகையில், குத்து பாடல்களின் ரசிகன் நான்!