ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தண்டாயுதபானி, நாயகன் படங்களை இயக்கிய சரவண சக்தி இப்போது முழு நேர நடிகராகிவிட்டார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது இயக்கி உள்ள படம் சூறக்காத்து. நந்தகுமார் என்ற புதுமுகம் நடிக்கிறார். அவர்தான் தயாரிப்பாளர். அவருக்கு ஜோடியாக லீமா நடிக்கிறார். கேசவ் கேமராமேன், பரிமளவாசன் மியூசிக் டைரக்டர்.
"நிறைய பேய் படங்கள் வருகிறது. அவை ஒரே மாதிரி கதையை கொண்டவை. ஒரு பாழடைந்த பங்களா, அல்லது அடர்ந்த காடு, அல்லது ஒரு ஆலமரம் இதைச் சுற்றித்தான் பேய் கதைகள் இருக்கும். இது வித்தியாசமான பேய் படம். ஹீரோ வெளியூரில் வேலை பார்க்கிறவன். பல வருடங்களுக்கு பிறகு ஊருக்கு சென்றால் அங்கு பேய் பலரை அடித்து கொலை செய்திருக்கிறது. ஊரே பேய் பயத்தில் இருக்கிறது. பகுத்தறிவுவாதியான ஹீரோ பேய் இல்லை என்பதை மக்களுக்கு நிரூபிக்க கொலைக்கான காரணங்களை தேடுகிறான்.
அப்போதுதான் பேய் பெயரை சொல்லி ஒரு கும்பல் கொலை செய்து வருதை கண்டுபிடிக்கிறான். அந்த கும்பல் இவனை கொன்று விடுகிறது. அதன் பிறகு பேயாக வரும் ஹீரோ வில்லன்களை எப்படி பழிவாங்குகிறான் என்பதுதான் கதை. அதாவது பேயே இல்லை என்றவன் பேயாக மாறி பேய் இருக்கு என்பதை உணர்த்துகிற கதை" என்கிறார் சரணவணன் சக்தி.